
கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட அபாயகரமான வெடிபொருட்களை இதுவரை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவிப்பு
முல்லைத்தீவு அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் ஆகிய பகுதியிலும்;கிளிநொச்சி முகமாலை மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகளிலும் கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து ஐம்பத்தொராயிரத்து எண்பது சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திமூவாயிரத்து ஐநூற்று ஐம்பத்திமூன்று அபாயகரமான வெடிபொருட்களை இதுவரை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
இன்றைய தினம் (27-04-2022) மேற்படி மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிகிகையிலேயே மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதாவது வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப்.இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஏப்ரல் மாதம்; 22 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இருபது இலட்சத்து ஐம்பத்தொராயிரத்து எண்பது சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திமூவாயிரத்து ஐநூற்று ஐம்பத்திமூன்று அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் அம்பகாமம்; பகுதியிலும்; துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.