சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  7499 news
  •  ·  5 friends
  • I

    9 followers

2 வருடங்கள் கடந்தும், ஒரு செங்கலை கூட அபிவிருத்திக்காக வைக்கவில்லை

"தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தும், ஒரு செங்கல் கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்படவில்லை" என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பஹத்த ஹேவாஹெட காரியாலய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்தார்."கண்டி மாவட்டத்திற்கு பல வருடங்களுக்கு பின் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது. அதனை மிக சிறந்த முறையில் கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்தினோம். கண்டி மாவட்டத்தில் பல ஆண்டுகள் தேங்கி கிடந்த உரிமை சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம். அதே போன்று, புறக்கணிக்கப்பட்டிருந்த தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினோம்.கடந்த தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் ஒரு செங்கற்கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்பட வில்லை. கடந்த ஆட்சி காலத்தில் வீடமைப்பிற்கான காணி வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இணைந்ததாக தனி வீட்டு திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. அவற்றில் பல வீட்டு திட்டங்கள் எமது காலப்பகுதியில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. எனினும் 2018 ஆம் ஆண்டு இறுதி காலம் முதல், 2019 ஆம் ஆண்டின் இறுதி காலம் வரை ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை எமது அரசாங்கம் முடிவுக்கு வருகின்ற போது அரைவாசி கட்டப்பட்ட வீடுகளாக இருந்தது. ஆனால் இன்று இரண்டு வருடங்கள் கடந்தும் அவை அதே நிலையிலேயே உள்ளது. அவற்றின் அபிவிருத்திக்காக ஒரு சதமேனும் நிதி ஒதுக்கப்படவில்லை.ஹேவாஹெட தொகுதியின், லூல்கந்துர தோட்டத்தின், தோட்ட வீடமைப்பு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் அரைகுறையாக கைவிடப்பட்டுள்ளது. ஊராகளை மற்றும் ஹந்தானை தோட்டத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாது அரைகுறை நிலையில் உள்ளது. இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ், ஹந்தானை தோட்டப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் அதே நிலைமையே காணமுடிகின்றது. தோட்ட பகுதிகளின் நாம் கொண்டு சென்ற வீடமைப்பு திட்டங்கள் முற்றாக இந்த ஆட்சியில் ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது.தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இவை கண்ணுக்கு தெரியாதுள்ளது. இத்தகைய திட்டங்களை பூர்த்தி செய்து மக்களுக்கு வழங்குவதை விட்டு, வேறு ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர். தமது நண்பர்களை, தமக்குதவிய வியாபாரிகளை, சந்தோஷப்படுத்தும் வேலையை செய்து வருகின்றனர். தோட்ட மக்களை ஏமாற்றி, காணி தருகின்றோம், என கூறிக்கொண்டு, தமது சகாக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மாவட்டம் முழுவதும் அலைந்து திரிகின்றனர்.தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு நாம் ஆரம்பித்து வைத்த திட்டங்களை முன்னெடுக்க இயலுமை இல்லையா? அல்லது இயலுமை இல்லாத பிரதிநிதிகளை கண்டி மாவட்டத்தில் வைத்திருப்பதால் இந்நிலைமையா? அல்லது ராஜாங்க அமைச்சரே இதைப்பற்றி தெரியாமல் இருக்கின்றாரா? என்ற கேள்வியையே மக்கள் சார்பாக நாம் முன்வைக்க வேண்டி இருக்கின்றது." என்றார்.
  • 491
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads