சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

அபிவிருத்தி பணிகள் பாதியளவிலேயே மேற்கொள்ளப்படும் அபாய நிலை

பிரதேச சபை வருமானத்தில் 2022ம் ஆண்டு செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் பாதியளவிலேயே மேற்கொள்ளப்படும் அபாய நிலையுடன், திண்ண, திரவக்கழிவகற்றலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றம் அரசியல் நெருக்கடிகள் மத்திய்ல எமது மண்ணில் வாழ்கின்ற மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார்கள். எரிபொருள் உள்ளட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற மக்கள் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகின்றது.இந்த நெருக்கடியான நிலை இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களையும் வெகுவாக பாதித்திருக்கின்றது. உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் முற்று முழுதாக முடங்கக்கூடிய நிலை இன்று உருவாகியிருப்பதை இன்று உணரக்கூடியதாக இருக்கின்றது.விசேடமாக கூறப்போனலா் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டை கடந்த டிசம்பர் மாதம் நிறைவு செய்திருந்தோம். எங்களுடைய பாதீடு முன்னேற்றகரமான பாதீடாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 160 மில்லியன் ரூபாய்களை மூலதன வேலைத்திட்டங்களிற்காக ஒதுக்கீடு செய்து சுமார் 78 வேலைத்திட்டங்களை இந்த ஆண்டு மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.ஆனால் இன்று இருக்கின்ற விலை மதிப்பீடுகளின்படி குறித்த தொகையை பெறமுடியுமா என்ற நிலை இருக்கையில், பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானத்திற்கு ஏற்ப செய்யப்படுகின்ற மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.தற்பொழுது இருக்கின்ற நிலவரத்தில் பெற்றுக்கொள்ளப்படக்கூடிய தொகையில் 78 வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு பதிலாக 40 வேலைத்திட்டங்கள் வரை மாத்திரமே மேற்கொள்ளக்கூடியதாக நிலை இருக்கின்றது. இது பாரதூரமான பிரச்சினையாக சபைகளிற்கு முன்னாலே இருக்கின்ற விடயமாக உள்ளது.இதேவேளை திண்மக்கழிவகற்றல் மற்றம் திரவக்கழிவகற்றல் என்பன எமது பிரதான சேவைகளில் ஒன்றாக இருக்கின்றது. அத்தியாவசிய பணிகளாக இருநக்கின்ற இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு எங்களுடைய வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.எங்களிற்கான தேவைகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்கப்படுவதன் காரணத்தினாலே அத்தியாவசிய சேவைகளில் உள்ள திண்மக்களழிவகற்றல் மற்றும் திரவக்கழிவகற்றல் சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடியதான நிலை ஏற்பட்டள்ளது.இதைவிட நிதி அமைச்சரின் சுற்றறிக்கைக்கு அமைவாக வீதி மின்விழக்குகழை அணைத்தல் மற்றும் புதிய விளக்குகளை பொருத்துவதை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்களும் மக்களிற்கான சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.இவ்வாறான நிலை கரைச்சி பிரதேச சபைக்கு மாத்திரமல்ல, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிற்கும் ஏற்பட்டிருக்கம் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் நிவாரணங்களை எதிர்பார்க்கின்றனர். கரைச்சி பிரதேச சபையினால் மக்களிற்கான வரிசார்ந்த நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படவுள்ளதா என அவரிடம் வினவியபோது,கடந்த காலங்களில் இருந்த ஆதன வரி அறவீட்டினை 10 வீதத்திலிருந்து குறைத்துள்ளுாம். தற்பொழுது மீண்டும் நெருக்கடியான நிலை மக்களிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரி செலுத்த தவறுபவர்களிற்கு அறவிடப்பட்டும் தண்டப்பணத்தினை நீக்குவது தொடர்பில் வரும் நாட்களில் சபை நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

  • 539
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads