
மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம்
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும்; மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் (25-02-2022) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி இருந்தனர்.இவ்வாறு மதுபோதையில் வாகனங்களைச் சாரதிகளுக்கு தலா 25,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.ஒன்பது பேருக்கு எதிராக இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது இதேவேளை காப்புறுதிப் பத்திரம் இன்றிவாகனம் செலுத்தியவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தவறான முறையில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற இரண்டு பேருக்கு தலா 5000 ரூபாவும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.