சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7523 news
  •  ·  5 friends
  • I

    9 followers

போரை தவிர்ப்பது பற்றி புதின் தான் முடிவு செய்ய வேண்டும் - அமெரிக்க ராணுவ மந்திரி

ரஷியா உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேருவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா பெரும் அளவில் தனது படைகளை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படை எடுக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது.

 

உக்ரைன் மீது படை எடுத்தால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜோபைடன் பயங்கரமான எச்சரிக்கைகளை விடுத்தார். உக்ரைனை தாக்கினால் அந்நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களம் இறங்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உள்ளன. எல்லையில் உக்ரைன்-ரஷிய ராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ரஷிய அதிபர் புதினிடம் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேசினார். அப்போது போரை தவிர்ப்பது பற்றி எடுத்துரைத்தார். இது குறித்து ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்வ்லாவ் ரோவ்கூறும் போது, ‘போரை ரஷியா விரும்பவில்லை. அதே வேளையில் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.

 

போரை தவிர்ப்பது புதின் கையில் தான் உள்ளது என்று அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு எதிராக படைகளை பயன்படுத்துவதற்கான இறுதி முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்பவில்லை. என்றாலும் இப்போது அவரிடம் தான் அந்த முடிவு இருக்கிறது. போரை தவிர்ப்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

உக்ரைன் நகரங்கள் மற்றும் குறிப்பிட்டதக்க பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ரஷியா தனது ஒரு லட்சம் ராணுவ வீரர்களை பயன்படுத்தலாம். ரஷியா அளிக்கும் தவறான தகவல்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அவர்கள் எங்களை முட்டாள் ஆக்க முடியாது என்றார். ராணுவ ஜெனரல் மார்க் மில்லே, உக்ரைனை சுற்றி ரஷிய தரைப்படை, கடற்படை, விமானப்படை மட்டுமல்ல சைபர் மற்றும் மின்னணு போர் திறன்கள், சிறப்பு நடவடிக்கை படைகளும் உள்ளன. உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடும் விளைவுகள் ஏற்படும்’ என்றார்.

  • 453
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads