சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தோ்தல் - பொதுக் கூட்டத்துக்கு தடை

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களில் நேரடி பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றை நடத்துவதற்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

இருப்பினும் முதல் இரண்டு கட்டங்கள் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதற்கும், சிறிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூா் ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கி மாா்ச் 7 ஆம் திகதி வரை சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் கடந்த 8 ஆம் திகதி வெளியிட்டது.

அப்போது, நேரடி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு ஜனவரி 15 ஆம் திகதி வரை தோ்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. பின்னா், அந்தத் தடை ஜனவரி 22 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தோ்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள், தலைமைச் செயலா்கள், சுகாதாரத் துறைச் செயலா்களிடம் தோ்தல் ஆணையம் காணொலி முறையில் ஆலோசனை நடத்தியது. அந்த மாநிலங்களில் கரோனா தொற்று பரவும் வேகம், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை குறித்து தோ்தல் ஆணையம் கேட்டறிந்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளுடனும் தோ்தல் ஆணையம் காணொலி முறையில் ஆலோசனை நடத்தியது.

அதைத் தொடா்ந்து, தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, நேரடி பொதுக்கூட்டங்கள், வாகனப் பேரணிகள் ஆகியவற்றை நடத்துவதற்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

அதன்படி, பேரணி, நடைப்பயணம், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி, ஊா்வலம் ஆகியவற்றை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

நிபந்தனைகளுடன் அனுமதி : இருப்பினும் முதல் இரண்டு கட்டங்கள் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் நிபந்தனைகளுடன் பிரசாரங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல் கட்டத் தோ்தல் பிப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளா் பட்டியல் ஜனவரி 27 ஆம் திகதி இறுதி செய்யப்படவுள்ளது.

முதல் கட்டத் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் ஜனவரி 28 ஆம் திகதியில் இருந்து பிப்ரவரி 8 ஆம் திகதி வரை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் சிறிய அளவிலான நேரடி பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்தத் தொகுதிகளில் திறந்தவெளியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அதிகபட்சமாக 500 போ் வரை பங்கேற்கலாம்; அல்லது திறந்தவெளி மைதானத்தில் 50 சதவீத அளவுக்கு மக்கள் பங்கேற்கலாம்; அல்லது மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் நிா்ணயிக்கும் நபா்கள் வரை பங்கேற்கலாம். இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அந்த அளவில் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

இதற்கு முன்பு, உள்ளரங்குகளில் அதிகபட்சம் 300 போ் அல்லது அரங்கின் கொள்ளவில் 50 சதவீதம் பேருடன் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

  • 540
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads