சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டுகின்றார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிலயைில், வெள்ள அழிவு மற்றும் பசளை இன்மையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. அதைவிட விலைவாசி அதிகரிப்பு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.அன்றாட வாழ்வியல் வாழ்க்கையில் வாழும் மக்களும் சரி, அரச உத்தியோகத்தர்களும் சரி 2 வாரங்கள் கூட வாழ்வாதாரத்தை சமாளிக்க முடியாத நிலையில் திணறுகின்றார்கள். ஆனால் இன்று வந்துள்ள அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் என்பது வெறும் மாயையான வரவு செலவு திட்டமாக இருக்கின்றது.எந்தவொரு சமூக நலன் சார்ந்து அல்லது, வறுமையை போக்கக்கூடிய அளவிலான வரவுசெலவு திட்டமாக இது அமைந்திருக்கவில்லை. கடன்பட்டு இந்த நாட்டை கொண்டு நடத்துகின்ற நிலையிலும் இன்று தாயின் கருவில் இருக்கின்ற பிள்ளையின் தலையைில்கூட கடன் சுமையை சுமத்தக்கூடிய நிலையில்தான் இந்த அரசு போய்க்கொண்டிருக்கின்றது.அதற்கு இந்த அரசு மாத்திரம் காரணமல்ல. கடந்த காலங்களில் இருந்த அரசும் இதற்கு காரணமாகத்தான் இருக்கின்றது. அதற்கு முன்னர் இருந்த இதே அரசு திவிநெகும நிதி மோசடியிலிருந்து பல பல மோசடிகள் பேசப்பட்டதாக இருக்கின்றது. பின்னர் வந்த ஆட்சியாளர்களில் மத்தியவங்கி பிணைமுறி மோசடியிலிருந்து மகாபொல உள்ளிட்ட மோசடிகளும் பேசப்பட்டதாக இருந்தது. தீர்வுகள் எட்டப்படவில்லை.தற்பொழுது உள்ள இந்த அரசும் தங்களுடைய குடும்ப ஆட்சிக்குள் அமைச்சர்களை உருவாக்கிவிட்டு விளையாட்டுப்பிள்ளைகள் போன்று காசுகளை மத்தியவங்க ஊடாக அச்சடித்துக்கொண்டு இன்றைக்கு பெரிய பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை எவ்வாறு சீர்ப்படுத்தலாம் என்ற எந்தவொரு சிந்தனைப்போக்கும் இல்லாமல் தொடர்ந்து இவ்வாறான பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளுவதென்பது ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் மக்களுடைய வாழ்வியலை பெரிதும் பாதிக்கும்.ஒருநேர உணவுக்குகூட மக்கள் அஞ்சுகின்ற நிலையில், கொலை கொள்ளை எனும் நிலைக்கு இந்த நாடு தள்ளப்படும் என்பது ஒரு வருத்தத்துக்குரிய விடயமாக இருக்கின்றது.காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு தீர்ப்பையும் சொல்லாமல், அல்லது எந்தவொரு விசாரணையையும் ஆக்கபூர்வமாக இதயசுத்தியுடன் முன்னெடுக்காமல் 300 மில்லியனை இந்த வரவு செலவுதிட்டத்தில் ஒதுக்கியுள்ளதாக இந்த வரவு செலவு திட்டத்தில் கூறுவதென்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கும்.சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் பூர்வாங்க விசாரணை ஒன்றை சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். அவர்களிற்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது. இந்த ஏமாற்றத்துக்கு எங்களுடைய மக்கள ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.எனவே இந்த அரசாங்கம் முதலில் பொறுப்புகூறலை இதயசுத்தியுடன் செய்வதற்கு தயாராக வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கேட்கின்ற கோரிக்கையை செவிமடுக்கவேண்டிய தேவையும், கடப்பாடும் அவர்களிற்கு இருக்கின்றது. ஏனெனில் இசர்வதேசத்தில் தங்களை நல்லவர்கள்போல் காட்டிக்கொண்டு, மனித உரிமையை தாங்கள் மேம்படுத்துவதுபோலும் காட்டிக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்த நிதி ஓதுக்கீட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்

  • 502
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads