Category:
Created:
Updated:
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மாம்பாக்கம் சாலையோர கடையில் அமர்ந்து டீ அருந்தினார். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய தனியார் மருத்துவமனை செலியியர்கள் இருவரை அழைத்து எங்கு பணி செய்கிறீர்கள் என்ற விவரத்தையும் முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அந்த இரண்டு செவிலியர்களும் முதலமைச்சருடன் செல்பி எடுத்து கொண்டனர்.