
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது
இன்று (08-11-2021) காலை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்ட மாவட்டத்தின் கிழக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 22 அடி 9 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.
இதேபோல் கல்மடு குளத்தின் நீர்மட்டம் 18 அடி 4 அங்குல மாகவும் பிரமந்தனாறு குளத்தின் நீர்மட்டம் 07 அடி 04 அங்குலமாகவும் கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் 10 அடி 9 அங்குலம் ஆகும் உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 9 அங்குல மாகவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம 3 அடி11அங்குல மாகவும் புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் 16 அடி 01அங்குலம் குடமுருட்டி குளத்தின் நீர்மட்டம் 6 அடி 4 அங்குல மாகவும் வன்னேரிககுளத்தின் நீர்மட்டம் 09 அடி 1 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.