Ads
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் வெள்ளிக்கிழமை பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் எனவு்ம, சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads