சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆர்யன்கானுடன் செல்பி எடுத்தவர் பிடிபட்டார்

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த இரண்டாம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 

மூன்றாவது முறையாக ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆர்யன் கான் கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. இவர் போலியாக சான்றிதழ்கள் அளித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார் என தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தால் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற வழக்கில் கிரன் கொசவி என்பவர் சாட்சியாளராக உள்ளார். இவர் இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சாட்சியாளராக உள்ளார். 

போதை விருந்து வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சாட்சியாக உள்ள கிரன் கொசவியை மராட்டிய போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கிரன் கொசவி மீது 2018 ஆம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு கிரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனாலும், அப்போது அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், போதைப்பொருள் வழக்கில் சாட்சியாக மாறியுள்ள கிரன் கொசவியை 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் புனே மாவட்ட போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கிரன் கொசவி புனே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சாட்சியாக உள்ள கிரன் கொசவியை 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் மராட்டிய மாநில போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 680
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads