
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலபோகத்தின் போது ஏற்பட்ட பயிரழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலபோகத்தின் போது ஏற்பட்ட பயிரழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்க முடியும் என கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக 1025 ஏக்கர் நெற்செய்கை 400 ஏக்கர் வரையான மறுவயற் பயிர்கள் 150 ஏக்கர் வரையான பழ பயிர்கள் 82 ஏக்கர் வரையான மரக்கறி செய்கைகள் என்பன அழிவடைந்துள்ளன.இந்த நிலையில் இவற்றுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இழப்பீடுகள் வழங்கப்படாமையினால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பாதிப்புகளை எதிர்கொள்வார்கள் தங்களுக்கான இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கடந்த பெரும் போகத்தின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கான இழப்பீடுகள் நாடளாவிய ரீதியில் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. அதற்கான நிதி கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மேற்படி இழப்பீடுகளை வழங்க முடியுமென காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.