சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஜும்ஆத் தொழுகைக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி

ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்றை இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஐ. அன்ஸாரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் DGHS Covid-19/347/2021 ஆம் இலக்க 21.10.2021 ஆம் திகதிய கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஒப்புதலின் பிரகாரம், பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடான ஜும்ஆத் தொழுகையினை மாத்திரம் நடாத்துவதற்கு பின்வரும் கட்டாய நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் பிரகாரம் இலங்கை வக்பு சபை அனுமதியினை வழங்குகின்றது.

1. இந்த அனுமதியானது ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளிவாசலிலும் இதற்காக எல்லா நேரத்திலும் கலந்து கொள்ளக் கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50 ஆகும்.

2. தொழுகையின் ஒரே ஒரு அமர்வு (வக்து) மாத்திரமே அனுமதிக்கப்படுகிறது.

3. ஒரு வரிசை இடைவெளி விட்டு (ஒவ்வொரு மற்ற வரிசையிலும்) தொழுகைகள் நடாத்தப்படல் வேண்டும்.

4. முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் இடைவெளி பேணல், சொந்தமான தொழுகை விரிப்பினை எடுத்து வருதல் மற்றும் வீட்டிலிருந்து வுழூ செய்து கொண்டு வருதல் என்பன கட்டாயமானதாகும்.

5. சுகாதார / பாதுகாப்பு தரப்பினரின் ஏனைய அனைத்து விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் வக்பு சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

6. வேறு எந்த கூட்டு வணக்க வழிபாடுகள் அல்லது செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பிரகாரம்இ எந்தவொரு பள்ளிவாசலிலும் ஏனைய தொழுகைகள், குர்ஆன் மஜ்லிஸ், நிகாஹ் மஜ்லிஸ் போன்றவைகளுக்கு இந்த ஒப்புதல், அனுமதியானது நீக்கப்படமாட்டாது.

7. பள்ளிவாசல்களில் ஏனைய அனைத்து தொழுகைகளையும் தனியாக தொழுவதற்கு மாத்திரம் எல்லா நேரத்திலும் 25 நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

8. பள்ளிவாசல்களில் உள்ள வுழூச் செய்யும் பகுதி மற்றும் கழிப்பறைகள் என்பன மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

9. தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் அவ்வாறான தனிமைப்படுத்தல் மட்டுப்படுத்தல் காலம் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

10. மேற்குறிப்பட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமில்லை என கருதும் நம்பிக்கையாளர்கள் / பொறுப்பாளர்கள் ஜும்ஆத் தொழுகையை நடாத்தாமல் விடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

11. மேலுள்ள அல்லது ஏனைய கொவிட் 19 வழிகாட்டுதல்களில் ஏதேனும் மீறல்கள் இடம்பெற்றால் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மிகக் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  • 766
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads