Category:
Created:
Updated:
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது.
அப்பெண்ணிற்கு இரண்டு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் எடைகளில் அதிகபட்சமாக 1.6 கிலோகிராம் எடைக்கொண்ட குழந்தையும், குறைந்தபட்சமாக 870 கிராம் எடைக்கொண்ட குழந்தையும் உள்ளது.
தாயும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பது இதுவே முதன்முறையாகும்.