சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டக்கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம்

மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டக்கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தினை கிளிநொச்சி ஊடக மையமும், சிவில் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் பின்னிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகம் வரை சென்று ஜனாதிபதி, பிரதமர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டன.மேற்படி மகஜர்களை மாவட்ட மாவட்ட அரசாங்க அதிபர் சார்பாக முதல்நிலை மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருலிங்கநாதன் பெற்றுக்கொண்டதுடன், உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்பதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இதற்கான கூட்டம் ஒன்றும் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு,யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டுவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட கவனம் செலுத்தி வரும் தங்களின் செயற்பாட்டிற்கு சிவில் சமூக அமைப்புக்களும், கிளிநொச்சி ஊடக மையமும் நன்றிகளை தெரிவிப்பதோடு, தங்களுடைய கவனம் மேலும் இந்த மாவட்டத்திற்கு தேவை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.கிளிநொச்சி மாவட்டத்தில் கரிசனை கொண்டு நீண்ட காலமாக சிவில் சமூக அமைப்புக்களிலும், கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளிலும் அதற்கு மேலாக ஊடகவியலாளராகவும் பணியாற்றி வரும் திடீர் மரண விசாரணை அதிகாரியான சிங்கராசா ஜீவநாயகம் கடந்த 18ம் திகதி இரவு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடமையின் நிமித்தம் சென்றிருந்தவேளை கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் இரவே கிளிநொச்சி பொலிஸ் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். ஆனால்; கிளிநொச்சி பொலிசாரிற்கு நன்கறிந்த குற்ற செயலுடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களுடன் பொலிசார் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.இதேவேளை, அண்மையில் கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியிலே இரு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவார காலமாக தாக்குதலாளிகள் மீது பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீளவும் பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் வைத்து மீளவும் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.இதனைவிட, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில், சட்டவிரோத மணலகழ்வு மேற்கொள்பவர்களால் ஒரு வயோதிபர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன், மணல் அகழ்வுகளை தடுக்க செல்லும் கிராம அலுவலர்களும் மண் மாபியாக்களால் கொலை அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கிளிநொச்சி நகரத்திற்கு அண்மித்த பகுதியில் மிக துணிச்சலாக சட்டவிரோத மது உற்பத்தி மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு இளைஞர்கள் தகவல் வழங்கியுள்ளனர். 119 இலக்கத்தின் ஊடாகவும், கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்திற்கு ஏனைய வழிகளிலும் இளைஞர்களாலும், ஊடகவியலாளர்களாலும் இவ்வாறு தகவல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 10 நிமிடத்தில் செல்லக்கூடிய தூரத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 2 மணி நேரம்வரை குறித்த பகுதிக்கு பொலிசார் செல்வதற்கு பின்னடித்துள்ளனர். பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் ஊடாக முற்றுகையிடப்பட்டு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவமும் மிக அண்மையில் பதிவாகியிருந்தது.இவை அனைத்துக்கும் பின்னணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையில் இருக்கும் பெரும்பாலான பொலிசாரே, குறிப்பாக உயர் பதவிநிலை அதிகாரிகள் துணை நிற்பதாக அறிய முடிகின்றது. குறைந்த அளவு சனத்தொகை கொண்ட எமது மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தவோ, அல்லது பொலிசார் சட்ட ஒழுங்கை சரியாக பேணுவதற்கோ முன்வராமை அனைவரிடத்திலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில் பொலிசார் மீது பொது மக்களிற்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பொலிசாரால் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வாறான நிலையில் பொலிசார் மீதும், சட்டம் ஒழுங்கு தொடர்பிலும் பொதுமக்களிற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.போராட்டத்தில் கலந்துகொண்ட அருட்தந்தை டிக்சன் உதயச்சந்திரன், கிளிநொச்சி ஊடக மையத்தின் ஆலோசகர் மு.விவேக், கிளிநொச்சி பிரஜைகள் குழுவின் தலைவர் சி.சின்னராசா, பேராசிரியரும், ஆலோசகரும், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியுமான தி.சிவரூபன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,மாவட்டத்தில் அண்மையில் தாக்கப்பட்ட சிங்கராசா ஜீவநாயகத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ள நிலையில் பொலிசார் உரிய முறையிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

  • 749
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads