சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

திருமணம் செய்து ஏமாற்றிய ஒருநாள் மனைவி

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). இவர் திருமணத்திற்காக 7 வருடமாக பெண் தேடி வந்துள்ளார். அவருக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இதனால் வயது ஏறியதே தவிர,பெண் அமையவில்லை.

திருமணம் செய்ய புரோக்கர்களை நாட முடிவு செய்த அவர், கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரில் உள்ள ஒரு புரோக்கரை பார்க்க சென்றார். அவரும் திருப்பூர் செட்டிபாளையத்தில் தனக்கு தெரிந்த பெண் புரோக்கர் ஒருவர் உள்ளார். அவருக்கு நிறைய மணமகள் தெரியும் அவரை அணுகுங்கள் என்றார்.

ராஜேந்திரன் அவருடைய நண்பர் மற்றும் சிறுவலூர் புரோக்கர் ஆகிய 3 பேரும் திருப்பூர் பெண் புரோக்கர் அம்பிகா என்பவரது வீட்டிற்கு வந்தனர்.அங்கு அம்பிகாவின் வீட்டில் ரீசா எனும் இளம் பெண்ணும் இருந்துள்ளார். ரீசா தான் மணமகள் என்று பெண் புரோக்கர் அறிமுகம் செய்து வைத்தார்.அந்த பெண்ணை பார்த்ததும் ராஜேந்திரனுக்கு பிடித்து விட்டது. 

பெண் புரோக்கர்,திருமணம் செய்யக் கூடிய பெண்ணுக்கு தாய் தந்தை யாரும் இல்லை, பெண்ணுக்கு தாலி மற்றும் தோடு,துணி ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டார் வாங்கி கொடுக்க வேண்டும். எனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.பெண் கிடைக்காமல் இருந்தவருக்கு இளம்பெண் கிடைப்பதை நினைத்த பெருமைப்பட்ட ராஜேந்திரன். இவை அனைத்திற்கும் சரி என தலையாட்டினார்.

பெண்ணுக்கு யாரும் இல்லாததால் இரண்டு நாட்களில் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி மணமகனின் குலதெய்வ கோவிலில் புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் திருமணம் தடபுடலாக நடந்துள்ளது. மணமகன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம் ஆகியோருடன் பெண் புரோக்கர்கள் அம்பிகா, வள்ளியம்மாள் ஆகிய இருவர் வந்துள்ளனர். ஆனால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து உறவினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு உள்ளார்கள். திருமணத்தின் முதல்நாள் ராஜேந்திரனுக்கு திருமண வாழ்வு சந்தோஷமாக தொடங்கியுள்ளது.

திருமணத்திற்கு அடுத்த நாள் ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அரைபவுன் தாலி, தோடு மற்றும் பட்டுப்புடவை சகிதம் வெளியே சென்ற ரீசா, அங்கு வந்த காரில் ஏறி சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. மனைவியின் செல்போனுக்கு ராஜேந்திரன் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது ரீசாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சிறுவலூர் புரோக்கரை தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு, புரோக்கர் அம்பிகாவை தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதிலை கூறவில்லை. அப்போதுதான் அந்த கும்பல் தன்னை ஏமாற்றி விட்டு, அரைபவுன் தாலி, அரைப் பவுன் தோடுடன் மோசடி செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. சிறுவலூர் புரோக்கர் மூலம் ரீசாவின் ஊரான அரியலூர் சென்று விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், 5 பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதும் தெரிய வந்தது.

  • 599
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads