சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் எமது மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கொவிட் நிலைமை எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர்களுடைய எண்ணிக்கை குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. தொடர்ந்துமாக எமது மாவட்டத்தினுடைய மக்கள் தங்களுடைய அன்றாட விடயங்களை செய்கின்றபொழுது தங்களையும், தங்கள் சார்ந்தவர்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.அதேவேளை, எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களிற்கு குறைந்ததான மாணவர் தொகை கொண்ட ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.அந்த வகையில் எமது மாவட்டத்தில் 52 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த 52 பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு வேண்டியதானமுன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இன்றைய தினம் ஆராயப்பட்டது.அதற்கு ஏற்றதான விடயங்களை கல்வி திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதேவேளை குறித்த நாளில் பாடசாலை ஆரம்பிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல் நிலைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அவ்வந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக கண்காணிக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது. 18, 19 வயது மாணவர்களிற்கான தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகளும் வரும் 21ம் திகதி பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுதுவரை 7057 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 166பேர் நோயாளர்களாக சிகிச்சை பெற்ற வருகின்றனர். நேற்றைய தினம் 14பேர் மாத்திரமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இறப்பு வீதமும் குறைந்தே காணப்படுகின்றது.ஒவ்வொரு வயது பிரிவினராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கும், பின்னர் 30 தொடக்கம் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தது.அந்த வகையில் எமது மாவட்டத்தில் 38428 பேர் தடுப்பூசி ஏற்றாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் அவர்கள் ஆர்வம் இன்மையைதான் அவர்கள் காண்பித்திருக்கின்றார்கள். அதேவேளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பின்னிக்கின்றார்கள்.அவ்வாறானவர்களை ஊக்குவித்து அவர்களிற்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ிகராம மட்டத்திலே வீடு வீடாக சென்று அவர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.

  • 718
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads