Ads
20 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று (19) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விரைந்து செயல்பட்டு குறித்த பகுதிக்குச் சென்று குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு, சந்தேக நபரான பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேசாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads