












இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம்
விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம், வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அனைவரும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு பரிந்துரைத்துள்ளனர். தடுப்பூசியினால் ஏற்படக்கூடும் பாதிப்பு நிலை தொடர்பாக உலகிலேயே பதிவாகிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிகழ்வுகளை கருத்திற்கொண்டதன் பின்னர் தடுப்பூசியில் உள்ள பாதுகாப்பான பெறுபேறுகளை அடுத்து தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என்பதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.