சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடைபிடிக்கும் தனித்துவ தலைமை

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி பற்றி தி.மு.க உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ புகழ்ந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வகித்த செங்கோட்டையன், ஒன்பது முறை சட்டசபையில் உறுப்பினராக இருந்து வருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது எனப் புகழாரம் சூட்டுகிறார். 

 

செங்கோட்டையனின் பேச்சு வெறுமனே ஸ்டாலினின் தலைமைக்கு கொடுக்கப்படும் பாராட்டாக மட்டுமில்லை, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, அவர்கள் செய்ய தவறிய விஷயங்களை சுட்டிக்காட்டும் விதமாகவே இருக்கின்றது. யாரும் எதிர்பாராத செங்கோட்டையனின் கருத்து அ.தி.மு.க வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே தி.மு.க.வினரால் அம்மா உணவகம் தாக்கப்பட்ட போது, அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தது தி.மு.க தரப்பு. 

 

தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இருந்த காரணத்தினால் அவை வினியோகிக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்ட நிலையில், மாணவர்கள் நலனுக்காக நீக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு நேரடியாக உத்தரவிட்டார் ஸ்டாலின். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர். 

 

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்வது, மீண்டும் ஆட்சி மாறினால், தி.மு.க அரசின் திட்டங்களைக் கிடப்பில் போடுவது என்ற பதில் நடவடிக்கைகள் தொடர்ந்து வந்த அரசியல் கலாச்சாரத்தைத் தான் தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படியான அரசியல் பண்பாட்டில் வந்த தமிழக அரசியல் சூழலில், ஸ்டாலினின் செயலும் நடவடிக்கையும் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி நேரத்தின்போது எழுப்பிய வினாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் அளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

இப்படி பாராட்டுகளை பெற்று வரும் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து மாற்றுக் கட்சி என்ன நினைக்கிறது என்று கேட்க, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை தொடர்பு கொண்டோம். அவர், ஒரு மாற்றுக் கட்சியினரை தமிழக அரசு மதிக்கும் போக்கு கட்டாயம் வரவேற்க்கத்தக்கது தான். அரசியல் நாகரீகம் அறிந்து யார் செயல்பட்டாலும் அதற்கு பாராட்டலாம். அதே நேரத்தில் தமிழக அரசின் இந்த செயலானது தொடருமா என்பது கேள்விக்குறி என்று கூறினார். 

 

அரசியல் ஆதாயத்துக்காகவும், பொது வெளியில் நற்பெயரை ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே முதல்வர் ஸ்டாலின் இப்படி நடந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுப்புவோருக்கு எல்லாம் பதில் கூறும் விதமாக, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி கூறுகையில்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அதை பின்பற்றும் முதல்வர் ஸ்டாலின், மற்ற கட்சியினரை கண்ணியத்தோடும் மாண்போடும் நடத்துகிறார். 

 

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என அனைவருமே தங்களை ஒரு மன்னரைப் போலவே எண்ணிக் கொண்டார்கள். அதனால், அவர்களால் மாண்போடு நடந்துகொள்ள முடியவில்லை. 

 

முதல்வர் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு என்பதை நன்கு அறிந்தவர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் அதற்குரிய ஆளுமையுடன் நடந்து கொள்கிறார் என்று விளக்கினார்.

 

  • 565
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads