சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8218 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடைபிடிக்கும் தனித்துவ தலைமை

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி பற்றி தி.மு.க உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ புகழ்ந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வகித்த செங்கோட்டையன், ஒன்பது முறை சட்டசபையில் உறுப்பினராக இருந்து வருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது எனப் புகழாரம் சூட்டுகிறார். 

 

செங்கோட்டையனின் பேச்சு வெறுமனே ஸ்டாலினின் தலைமைக்கு கொடுக்கப்படும் பாராட்டாக மட்டுமில்லை, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, அவர்கள் செய்ய தவறிய விஷயங்களை சுட்டிக்காட்டும் விதமாகவே இருக்கின்றது. யாரும் எதிர்பாராத செங்கோட்டையனின் கருத்து அ.தி.மு.க வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே தி.மு.க.வினரால் அம்மா உணவகம் தாக்கப்பட்ட போது, அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தது தி.மு.க தரப்பு. 

 

தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இருந்த காரணத்தினால் அவை வினியோகிக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்ட நிலையில், மாணவர்கள் நலனுக்காக நீக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு நேரடியாக உத்தரவிட்டார் ஸ்டாலின். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர். 

 

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்வது, மீண்டும் ஆட்சி மாறினால், தி.மு.க அரசின் திட்டங்களைக் கிடப்பில் போடுவது என்ற பதில் நடவடிக்கைகள் தொடர்ந்து வந்த அரசியல் கலாச்சாரத்தைத் தான் தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படியான அரசியல் பண்பாட்டில் வந்த தமிழக அரசியல் சூழலில், ஸ்டாலினின் செயலும் நடவடிக்கையும் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி நேரத்தின்போது எழுப்பிய வினாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் அளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

இப்படி பாராட்டுகளை பெற்று வரும் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து மாற்றுக் கட்சி என்ன நினைக்கிறது என்று கேட்க, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை தொடர்பு கொண்டோம். அவர், ஒரு மாற்றுக் கட்சியினரை தமிழக அரசு மதிக்கும் போக்கு கட்டாயம் வரவேற்க்கத்தக்கது தான். அரசியல் நாகரீகம் அறிந்து யார் செயல்பட்டாலும் அதற்கு பாராட்டலாம். அதே நேரத்தில் தமிழக அரசின் இந்த செயலானது தொடருமா என்பது கேள்விக்குறி என்று கூறினார். 

 

அரசியல் ஆதாயத்துக்காகவும், பொது வெளியில் நற்பெயரை ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே முதல்வர் ஸ்டாலின் இப்படி நடந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுப்புவோருக்கு எல்லாம் பதில் கூறும் விதமாக, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி கூறுகையில்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அதை பின்பற்றும் முதல்வர் ஸ்டாலின், மற்ற கட்சியினரை கண்ணியத்தோடும் மாண்போடும் நடத்துகிறார். 

 

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என அனைவருமே தங்களை ஒரு மன்னரைப் போலவே எண்ணிக் கொண்டார்கள். அதனால், அவர்களால் மாண்போடு நடந்துகொள்ள முடியவில்லை. 

 

முதல்வர் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு என்பதை நன்கு அறிந்தவர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் அதற்குரிய ஆளுமையுடன் நடந்து கொள்கிறார் என்று விளக்கினார்.

 

  • 650
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads