சினிமா செய்திகள்
அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்கா
விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது
சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை
சேலையில் அசத்தும் அழகில் அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு  அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார் நடிகர் யோகி பாபு
யோகி பாபு  பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற
வெள்ள பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்
தனக்கு கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா
நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திர
முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.இதற்கு காரணம் இவர் தனது அபார
மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை
மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றி உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள
ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம் - நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிற
புளூ பிலிம் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கேன்- லாஸ்லியா
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற
சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன். அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டூடன்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
Ads
 ·   · 6977 news
  •  · 5 friends
  • I

    9 followers

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடைபிடிக்கும் தனித்துவ தலைமை

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி பற்றி தி.மு.க உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ புகழ்ந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வகித்த செங்கோட்டையன், ஒன்பது முறை சட்டசபையில் உறுப்பினராக இருந்து வருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது எனப் புகழாரம் சூட்டுகிறார். 

 

செங்கோட்டையனின் பேச்சு வெறுமனே ஸ்டாலினின் தலைமைக்கு கொடுக்கப்படும் பாராட்டாக மட்டுமில்லை, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, அவர்கள் செய்ய தவறிய விஷயங்களை சுட்டிக்காட்டும் விதமாகவே இருக்கின்றது. யாரும் எதிர்பாராத செங்கோட்டையனின் கருத்து அ.தி.மு.க வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே தி.மு.க.வினரால் அம்மா உணவகம் தாக்கப்பட்ட போது, அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தது தி.மு.க தரப்பு. 

 

தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இருந்த காரணத்தினால் அவை வினியோகிக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்ட நிலையில், மாணவர்கள் நலனுக்காக நீக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு நேரடியாக உத்தரவிட்டார் ஸ்டாலின். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர். 

 

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்வது, மீண்டும் ஆட்சி மாறினால், தி.மு.க அரசின் திட்டங்களைக் கிடப்பில் போடுவது என்ற பதில் நடவடிக்கைகள் தொடர்ந்து வந்த அரசியல் கலாச்சாரத்தைத் தான் தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படியான அரசியல் பண்பாட்டில் வந்த தமிழக அரசியல் சூழலில், ஸ்டாலினின் செயலும் நடவடிக்கையும் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி நேரத்தின்போது எழுப்பிய வினாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் அளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

இப்படி பாராட்டுகளை பெற்று வரும் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து மாற்றுக் கட்சி என்ன நினைக்கிறது என்று கேட்க, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை தொடர்பு கொண்டோம். அவர், ஒரு மாற்றுக் கட்சியினரை தமிழக அரசு மதிக்கும் போக்கு கட்டாயம் வரவேற்க்கத்தக்கது தான். அரசியல் நாகரீகம் அறிந்து யார் செயல்பட்டாலும் அதற்கு பாராட்டலாம். அதே நேரத்தில் தமிழக அரசின் இந்த செயலானது தொடருமா என்பது கேள்விக்குறி என்று கூறினார். 

 

அரசியல் ஆதாயத்துக்காகவும், பொது வெளியில் நற்பெயரை ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே முதல்வர் ஸ்டாலின் இப்படி நடந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுப்புவோருக்கு எல்லாம் பதில் கூறும் விதமாக, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி கூறுகையில்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அதை பின்பற்றும் முதல்வர் ஸ்டாலின், மற்ற கட்சியினரை கண்ணியத்தோடும் மாண்போடும் நடத்துகிறார். 

 

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என அனைவருமே தங்களை ஒரு மன்னரைப் போலவே எண்ணிக் கொண்டார்கள். அதனால், அவர்களால் மாண்போடு நடந்துகொள்ள முடியவில்லை. 

 

முதல்வர் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு என்பதை நன்கு அறிந்தவர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் அதற்குரிய ஆளுமையுடன் நடந்து கொள்கிறார் என்று விளக்கினார்.

 

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 524
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads