சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7514 news
  •  ·  5 friends
  • I

    9 followers

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்

தலீபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர். இவர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாகவே வெளியேறி வருகின்றனர்.

 

கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். கோராசன் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகளை நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 180-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். 

 

இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியது. இதில் காபூல் குண்டு வெடிப்பு சதிகாரன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்தார். ஜோ பைடன் எச்சரித்தபடியே மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் காபூல் விமான நிலையத்தை நேற்று அதிரவைத்தது. நேற்று மாலையில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டை வீசினர்.

 

இந்த ராக்கெட் தனது இலக்கான காபூல் விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. நெரிசலான பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது ராக்கெட் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது.

 

இந்த ராக்கெட் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு பெண் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் காபூலை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

 

விமான நிலையத்துக்கு வெளியே குண்டு வெடிப்பை நிகழ்த்திய ஐ.எஸ். கோராசன் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இதனிடையே பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் குறித்த செய்தி வெளியான சிறிது நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக காரில் சென்று கொண்டிருந்த தற்கொலை படை பயங்கரவாதிகளை டிரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • 542
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads