சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்

தலீபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர். இவர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாகவே வெளியேறி வருகின்றனர்.

 

கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். கோராசன் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகளை நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 180-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். 

 

இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியது. இதில் காபூல் குண்டு வெடிப்பு சதிகாரன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்தார். ஜோ பைடன் எச்சரித்தபடியே மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் காபூல் விமான நிலையத்தை நேற்று அதிரவைத்தது. நேற்று மாலையில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டை வீசினர்.

 

இந்த ராக்கெட் தனது இலக்கான காபூல் விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. நெரிசலான பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது ராக்கெட் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது.

 

இந்த ராக்கெட் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு பெண் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் காபூலை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

 

விமான நிலையத்துக்கு வெளியே குண்டு வெடிப்பை நிகழ்த்திய ஐ.எஸ். கோராசன் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இதனிடையே பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் குறித்த செய்தி வெளியான சிறிது நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக காரில் சென்று கொண்டிருந்த தற்கொலை படை பயங்கரவாதிகளை டிரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • 625
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads