சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பெண்  டிக்டாக்கில் பிரபலம்.  அவர் விதவிதமாக வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிடுவது வழக்கம். இதனால் ஏராளமான  பின்தொடர்பவர்கள் உள்ளனர்.  அந்த பெண் தனது நண்பர்கள் ஆறு பேருடன் மினார் -இ -பாகிஸ்தான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். 

 

லாகூரின் இக்பால் பார்க் அருகே வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த டிக்டாக் பிரபலம் தப்பித்து ஓடினார். ஆனால், அந்த கும்பலில் சிலர் அவர் உடைகளை கிழித்தனர். அவரை அங்கும் இங்குமாக தள்ளினர். தரதரவென  இழுத்தனர். மேலே தூக்கி வீசினர் இருந்தாலும் அதில் இருந்த சிலர், அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களாலும் முடியவில்லை.

 

இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலானதை அடுத்து பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் பற்றிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  அதில், பரபரப்பு நிறைந்த சாலையில் திறந்த நிலையிலான ரிக்சா ஒன்று சென்று கொண்டிருக்கிறது.  அதில் இரண்டு பெண்கள் நடுவே குழந்தை ஒன்றை வைத்து கொண்டு அமர்ந்துள்ளனர்.

 

ரிக்சாவை ஒட்டியபடி மோட்டார் சைக்கிள் ஒன்று வருகிறது.  அதில் இருந்த ஒரு நபர் திடீரென ரிக்சாவில் தொற்றி கொள்கிறார்.  இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  அந்த நபர் ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிடுகிறார்.

 

உடனே அந்த பெண்கள் அலறி கூச்சலிடுகின்றனர்.  ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.  ஆத்திரத்தில் பெண்களில் ஒருவர் செருப்பு ஒன்றை கழற்றி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நோக்கி அடிக்க முற்படுகிறார்.  ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் ரிக்சாவில் இருந்து இறங்கி செல்ல முற்படுகிறார்.  எனினும், அருகேயிருந்த மற்றொரு பெண் அவரை தடுத்து அமர வைக்கிறார்.

 

அந்த ரிக்சாவை சுற்றி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என ஆண்கள் பலர் சூழ்ந்து கொள்கின்றனர்.  அவர்கள் கைகளில் தேசிய கொடியுடன் காணப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • 704
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads