Category:
Created:
Updated:
சுனாமி காலப்பகுதியில் பொது மக்கள் தமது வழக்குகளை உரிய காலப்பகுதியில் நிறைவு செய்து கொள்வதற்கு முடியாமல் போன சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் தலையிட்டு அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்ததாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
COVID 19 விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்காக இந்த நகல் சட்டமூலம் கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்காக சட்டத்தரணிகள் சங்கம், வங்கியாளர்கள் சங்கம், வர்த்தக சபை மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் கருத்துகளும், யோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. தமது வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த சட்டமூலம் துணை புரிகின்றது. என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.