Category:
Created:
Updated:
அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியாசாலை, ராகம போதனா வைத்தியசாலை மற்றும் கம்பஹா ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு 16 ஒட்சிசன் செறிவூட்டும் கருவிகள் இராணுவத்தினரால் கடந்த 13 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.
இந்த ஒட்சிசன் செறிவூட்டல் கருவிகளை இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஓ.எம்.டி குணசிங்க குறித்த மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.