சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அமெரிக்காவில் கோர தாண்டவமாடும் கொரோனா

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா தடுப்பூசி அதிக வேகத்தில் போடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அப்படி இருந்தும் சமீபநாட்களாக அமெரிக்காவில் கொரோனா மீண்டும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. 

நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தொற்றுக்கு காரணம் உருமாறிய கொரோனா வகையை சேர்ந்த டெல்டா வைரஸ்தான் என்று கருதப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் மளமளனெ அதிகரித்து வருகிறது. அதனால், ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.

கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்ந்து வருகிறார்கள். புளோரிடா ஆஸ்பத்திரி சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி மேரி மேஹியு கூறுகையில், ‘‘தடுப்பூசி போடாதவர்களை டெல்டா வைரஸ் வேகமாக தாக்கி வருகிறது. ஜாக்சன்வில்லே, ஆர்லாண்டோ ஆகிய நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கடந்த வாரம் நோயாளிகள் வருகை உச்சத்தை தொட்டது’’ என்றார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஹூஸ்டன் நகர ஆஸ்பத்திரிகளின் அவசரகால அறைகளில் படுக்கை இருப்பை தாண்டி நோயாளிகள் குவிந்து விட்டனர். ஒரு ஆஸ்பத்திரியில் நடைபாதையிலும், காத்திருப்பு அறையிலும் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நோய் பாதிப்பு குறைவாக இருந்தால், காத்திருப்பு அறையில்தான் இடம் கிடைக்கும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இதுபோல், குழந்தைகள் ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தடுப்பூசி போட்டவர்களுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு தொற்று பாதிக்க 19 மடங்கு வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, ஆரோக்கியமானவர்கள், இளைஞர்கள் போன்ற ஆபத்து இல்லாத நபர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள் மறைமுகமாக மற்றவர்களுக்கு தொற்றை பரப்ப வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க தொற்று நோயியல் நிறுவனத்தின் இயக்குனர் அந்தோணி பவுசி கேட்டுக்கொண்டுள்ளார்.

  • 705
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads