
கொரோனா மூன்றாவது அலை அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்
இந்தியாவில் விரையில் தொடங்கவுள்ள கொரொனா மூன்றாவது அலை அதிகப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளாதாகக் கூறப்படுகிறது.இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரொனா மூன்றாவது அலை வரும் ஆகஸ்ட் மாதம் கடைசியில் ஆரம்பித்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்தில் சுச்சம் அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது. கடந்த வருடம் பரவிய முதலாவது அலை மற்றும் இந்த வருடத் தொடக்கத்தில் பரவிய இரண்டாம் அலைகளை விட வரப்போகிற மூன்றாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இதுவரை பாதிப்பு ஏற்படாத இடங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.