சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  7499 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்?

சென்னையில் உள்ள ஆர்கே நகர் பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகள் இடித்து தள்ளப்பட்ட நிலையில், முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குரல் கொடுக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அரும்பாக்கத்தில் உள்ள ஆர்கே நகரின் கூவம் ஆற்றுப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகவும், விரைவில் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

அரும்பாக்கத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. எந்தவித நோட்டீசும், மாற்று வீடுகளும் தராமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். வீடுகளை இடித்து வெளியேற்றப்பட்டதால், பொதுமக்கள் கண்ணீருடன் வீதிகளில் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் உலுக்கியது.

சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால், பட்டியலின மக்களின் உரிமைக்காகவே கட்சியை நடத்தி வருவதாக கூறி வரும் திருமாவளவன் இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்காதது அரும்பாக்கம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.  

இந்த விவகாரத்தில் திருமாவளவன் விமர்சனத்திற்கு உள்ளாவதை தவிர்க்க, தனது கட்சி நிர்வாகியான வன்னியரசு மூலம் பொத்தாம் பொதுவதாக ஒரு டுவிட் போடச் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விளாசுகின்றனர்.

களத்திலும், திரையிலும் பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக அருகம்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆட்சியின் போது சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள 370-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிசைகளை அகற்றினர். அப்போதைய அரசைக் கண்டித்து கூவம் நதியில் இறங்கி அப்பகுதி மக்கள் போராடினர். போராட்டத்தில் இறங்கிய மக்களை இயக்குநர் பா. ரஞ்சித் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார்.

தற்போது திமுக தலைமையிலான அரசு அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வரும் நிலையில், இன்று வரை அப்பகுதி மக்களை சந்திக்கவோ, தி.மு.க அரசுக்கு எதிராகவோ தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • 606
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads