சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்?

சென்னையில் உள்ள ஆர்கே நகர் பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகள் இடித்து தள்ளப்பட்ட நிலையில், முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குரல் கொடுக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அரும்பாக்கத்தில் உள்ள ஆர்கே நகரின் கூவம் ஆற்றுப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகவும், விரைவில் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

அரும்பாக்கத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. எந்தவித நோட்டீசும், மாற்று வீடுகளும் தராமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். வீடுகளை இடித்து வெளியேற்றப்பட்டதால், பொதுமக்கள் கண்ணீருடன் வீதிகளில் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் உலுக்கியது.

சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால், பட்டியலின மக்களின் உரிமைக்காகவே கட்சியை நடத்தி வருவதாக கூறி வரும் திருமாவளவன் இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்காதது அரும்பாக்கம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.  

இந்த விவகாரத்தில் திருமாவளவன் விமர்சனத்திற்கு உள்ளாவதை தவிர்க்க, தனது கட்சி நிர்வாகியான வன்னியரசு மூலம் பொத்தாம் பொதுவதாக ஒரு டுவிட் போடச் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விளாசுகின்றனர்.

களத்திலும், திரையிலும் பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக அருகம்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆட்சியின் போது சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள 370-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிசைகளை அகற்றினர். அப்போதைய அரசைக் கண்டித்து கூவம் நதியில் இறங்கி அப்பகுதி மக்கள் போராடினர். போராட்டத்தில் இறங்கிய மக்களை இயக்குநர் பா. ரஞ்சித் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார்.

தற்போது திமுக தலைமையிலான அரசு அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வரும் நிலையில், இன்று வரை அப்பகுதி மக்களை சந்திக்கவோ, தி.மு.க அரசுக்கு எதிராகவோ தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • 737
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads