சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  7800 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தொழிலதிபரிடம் பேசி பேசியே பல லட்சம் சுருட்டிய பெண்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள கண்டியூரைச் சேர்ந்தவர் சரவண பார்த்திபன் (வயது 51). இவருக்கு நிலபுலங்கள் உள்ளன. அதோடு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார். இவருக்கு தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்த ஜனனி ஜாஸ்மின் என்ற 23 வயதே ஆன இளம்பெண் பேஸ்புக் மூலம் சரவணனுக்கு அறிமுகமாகியுள்ளார். ஜனனி ஜாஸ்மினுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் பார்த்திபனுடன் வசித்து வருகிறார்.

தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லாமல் மறைத்த ஜனனி ஜாஸ்மீன், தொடர்ந்து சரவணனுடன் முகநூலில் பழகி வந்துள்ளார். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிலமுறை நேரில் சந்தித்து பேசியதுடன், பார்க், பீச்சுமாக சுற்றியுள்ளனர்.

ஜனனியின் அழகில் மயங்கி விழுந்த சரவணன், கேட்டதையெல்லாம் வாங்கி கொடுக்க ஆரம்பித்தார். சரவணனனை சாதகமாக்கிய ஜனனி ஜாஸ்மின், சரவணனிடமிருந்து ஏழு லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஊரடங்கில் எப்படி இவ்வளாவு பணம் சம்பாதித்தாய் என கணவர் கேட்க, நடந்ததை கூறிய ஜனனியின் நேர்மையை பாராட்டிய பார்த்திபன், இந்த சம்பவத்திற்கு உடந்தையானான்.

சரவணனின் சபல புத்தியை சாதகமாகப் பயன்படுத்தி அவரிடமிருந்து மேலும் பணம் கறக்க முடிவு செய்த ஜனனி, முகநூலில் ரம்யா என்ற பெயரில் போலியாக ஒரு ஐடி உருவாக்கி அதன்மூலம் சரவணனை தொடர்புகொண்டு அவரிடம் பழகி வந்துள்ளார். சரவணன் வழக்கம்போல் அப்பெண்ணுடனும் முகநூலில் தொடர்ந்து நட்பில் இருந்துள்ளார். 

 சரவணனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தன்னை தூத்துக்குடி நகர போலீஸ் டிஎஸ்பி என அறிமுகம் செய்துகொண்டு, உங்களுடன் முகநூலில் பழகி வந்த ரம்யா என்பவர் தற்கொலை செய்து இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இத் தகவலைக் கேட்டு சரவணன் அதிர்ச்சியடைந்தார்.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமெனில் பத்து லட்ச ரூபாய் தரவேண்டும் எனவும், இதற்கு சம்மதம் எனில் இன்ஸ்பெக்டர் ஒருவரை அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த டீலுக்கு சரவணனும் ஒப்புக்கொண்டார்.

அவரது வீட்டுக்கு வந்த ஜனனி கணவன் பார்த்திபன், தன்னை இன்ஸ்பெக்டர் எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டு, பணம் வாங்க வந்திருப்பதாக கூறியுள்ளார். டிஎஸ்பி கேட்ட ரூ 10 லட்சத்தை புரட்ட முடியாததால் தன் வசம் கையிலிருந்த ரூ 63,000ஐ பார்த்திபனிடம் கொடுத்த சரவணன், மீதிப் பணத்தை புரட்டி தரும் வரை தங்கியிருக்குமாறு கூறி அவரை கும்பகோணத்தில் உள்ள ஒரு லாட்ஜில் பார்த்திபன் பெயரிலேயே அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.

சரவணன் கும்பகோணத்தைச் சேர்ந்த தனது நண்பர்களான மனோகரன், வீரா ஆகிய 2 வழக்கறிஞர்களிடம் கூறி தனக்கு கடனாக பணம் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.

இதைக்கேட்ட நண்பர்கள், இது போன்று போலீசார் நேரில் வந்து பணம் வாங்கமாட்டார்கள் எனக்கூறி அவ்விரு வழக்கறிஞர்களும் பார்த்திபன் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்து அவரை நேரில் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவர் இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும் ஜனனி ஜாஸ்மினின் கணவர் என்பதும் தெரியவந்தது. அதோடு சரவணனை ஏமாற்றி அவரிடம் பணம் பறிப்பதற்காக ஜனனி ஜாஸ்மின் குரல் மாற்றும் செயலி மூலம் தூத்துக்குடி டிஎஸ்பி போல ஆண் குரலில் பேசி ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

பார்த்திபன் மூலம் அவரது மனைவி ஜனனியை தொடர்புகொண்டு பேசி, அவர் கும்பகோணம் வந்தால் தான் அவரது கணவரை விடுவிப்போம் என சரவணனும் அவரது நண்பர்களும் கூறியுள்ளனர். ஜனனி ஜாஸ்மின் தூத்துக்குடியிலிருந்து ஒரு வாடகை காரில் புறப்பட்டு கும்பகோணம் வந்தார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

ஜனனியும் அவரது கணவரும் இணைந்து காவல்துறை அதிகாரிகள் போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி சரவணனிடம் பணம் பறிக்க முயன்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சரவணன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தில்லாலங்கடி பெண் ஜனனி ஜாஸ்மின் அவரது கணவர் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

  • 568
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads