![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
சென்னை மற்றும் கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், இன்று சராசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
மீண்டும் 1,800க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 1,859 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,55,664ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, கோவையில் இன்று 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 181 பேருக்கும், திருப்பூரில் 78 பேருக்கும், ஈரோட்டில் 166 பேருக்கும், சேலத்தில் 95 பேருக்கும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,023 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,145 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 434ஆக அதிகரித்துள்ளது.