சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8218 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ரெயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி

உத்தரப்பிரதேச மாநிலம், பரோலி மாவட்டத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கிக்கு  அதே பகுதியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியரான ராஜேஷ் குமார் என்பவர் பணப் பரிவர்த்தனைக்காக வந்துள்ளார்.  ராஜேஷ் குமார் முக கவசம் அணிந்திருக்கவில்லை. 

 

முககவசம் அணியாமல் வங்கிக்குள் நுழைய முயன்ற ராஜேஷ்குமாரை வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஷ்ரா தடுத்து நிறுத்தி, முககவசம் அணியாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் குமாரின் மனைவி அவரை சமாதானப்படுத்தி அருகிலிருந்த கடைக்குச் சென்று முககவசம் வாங்கிக் கொடுத்துள்ளார். அவரும் முககவசத்தை அணிந்துகொண்டு மீண்டும் வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

 

வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ரா முகக்கவசம் அணிந்து வந்த போதும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி ராஜேஷ் குமாரை அவமதித்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

 

வாக்கு வாதம் முற்றிய நிலையில், வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ரா திடீரென ராஜேஷ் குமாரை கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த  துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார். காலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் குமாருக்கு அவரது மனைவி கதறி அழுதபடி முதலுதவிகள் செய்து கொண்டே என் கணவரை அநியாயமாகச் சுட்டு விட்டீர்களே என்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.   துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களூம் அதிர்ச்சி அடைந்தனர்.துப்பாக்கிச் சூடு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். 

 

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ரயில்வே ஊழியர் ராஜேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ராவை கைது செய்து போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • 609
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads