சினிமா செய்திகள்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
நடிகர் சூரி சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் ’விடுதலை’ படத்தின் வெற்றியை அடுத்த அவர் ’விடுதலை 2’ ’கொட்டுக்காளி’ ’கருடன்’ உள்பட சில படங்க
நகைச்சுவை மன்னன் நாகேஷ்
அவர் காமெடி செய்யும் முன்பே நாம் சிரிக்க ஆரம்பித்து விடுவோம். அந்த அளவுக்கு நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர் தான் நாகேஷ். இவர் படத்தில் தான் இப்படி.
‘எலக்சன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு
‘உறியடி’ புகழ் நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும
நீச்சல் உடையில் அசத்தும் அழகில் பிரணிதா சுபாஷ்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி
உள்ளாடை அணியாமல் அழகு காட்டிய  ரெஜினா கசாண்ட்ரா
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர
Ads
 ·   ·  7578 news
  •  ·  5 friends
  • I

    9 followers

260 பில்லியன் ரூபாய்க்கு மேல் கொரோனா நிவாரணம் - ஜனாதிபதி அறிவிப்பு

கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 8.30 மணி அளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

"இந்த நேரத்தில் மிகவும் கடுமையான பிரச்சினை கொவிட் -19 உலகளாவிய தொற்று நோயாகும்.

தற்போதைய நிலையில் தனது மக்களுக்காக எந்தவித தடுப்பூசியையும் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகள் கூட உள்ளன.

தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதில் நான் விசேட ஆர்வம் காட்டினேன்.

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர்.

எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகும். "

"கொவிட் பரவலை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடு விதித்து, சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு எவ்வளவு அறிவுறுத்தப்பட்டாலும், சில பொது மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

பல புதிய செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது.

கொரோனா காரணமாக அரசாங்கம் பல கூடுதல் செலவுகளைச் செய்கிறது.

கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளது.

கொரோனா செலவினம் திட்டமிடப்பட்ட நிவாரணங்களுடன் சேர்க்கப்படும் போது, இது கடந்த ஆண்டு நாட்டின் மொத்த அரசாங்க வருவாயான 1,380 பில்லியன் ரூபாயில் பாதி ஆகும். "

கொழும்பு துறைமுக நகரத்தின் புதிதாக சேர்க்கப்பட்ட 269 ஹெக்டேருக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு தற்போது எழுந்துள்ளது.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, 100% இலங்கையர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை நியமித்தேன்.

முதலாவது முதலீடாக 400 மில்லியன் டொலர் முதலீட்டில் இரண்டு கோபுரங்களுடன் கூடிய வர்த்தக கட்டிடத்திற்கு அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற நிதிக் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ”

இப்போது சிலர் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் நான் விரும்புவது ஒரு சிலரைப் பிரியப்படுத்த எனது கொள்கைகளை மாற்றுவதல்ல, மாறாக நான் உறுதியளித்த சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தினை செயல்படுத்துவதாகும்.

அறிவார்ந்த மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். " என்றார்.

  • 512
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads