Category:
Created:
Updated:
களுத்துறை மாவட்டத்தின் வரகாகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பலிகந்த பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று மதியம் நபர் ஒருவர் குறித்த காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த போது குறித்த எலும்புத் துண்டுகளை கண்டு வரகாகொட பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரினது என சந்தேகிக்கப்படும் எலும்புத் துண்டுகள் பிரதேசத்தின் பல இடங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபரினது என சந்தேகிக்கப்படும் உள்ளாடை ஒன்றும் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு வந்த மத்துகம பதில் நீதவான் டி.வி.விஜேசேன நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.