சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தாயை இழந்து துபாயில் தவித்த 10 மாத குழந்தை : திருச்சியில் உச்சி நுகர்ந்த தந்தை

துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்கு சென்ற பெண் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை தமிழக அரசு உதவியுடன் மீண்டும் தமிழகத்திற்கு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த வேலன் – பாரதி தம்பதிக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் குழந்தை விக்னேஷ் 13 வயதில் சிறுநீரக கோளாறால் இறந்தார்.

இந்த சோகத்தை தாங்க முடியாத தம்பதி குடும்ப வறுமை , பொருளாதாரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 மாத கைக்குழந்தையுடன் தாய் பாரதி வீட்டு வேலைக்காக துபாய் சென்றார்.

ஒரு மாதம் வீட்டு வேலை செய்த பாரதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் சிகிச்சை பலனின்றி பாரதி உயிரிழக்க, 10 மாத குழந்தை ஆதரவற்ற நிலையில் தவித்தது.

இதையறிந்த துபாய் நகர திமுக அமைப்பாளர் மீராமிதுன் அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றுள்ளார்.

கைக்குழந்தை தேவேஷ் பயணி ஒருவர் மூலம் நேற்று மாலை துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள தந்தை வேலனுக்கு தகவல் கொடுக்க, அவரும் திருச்சி விமான நிலையத்திற்கு தனது 2வது மகனுடன் வந்தார்.

குழந்தையை பார்த்ததும் ஆனந்த கண்ணீரில் வேலன் தனது மகனை உச்சி நுகர, காண்போர் கண்களை இந்த சம்பவம் கண்ணீர் குளமாக்கியது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

  • 589
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads