
உலகின் 3-வது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது உலகின் மூன்றாவது பொிய வைரமாகும். இந்த வைரம் 1,098 காரட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்ஸ்வானா நாட்டில் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனம் உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை கண்டுபிடித்தது. இந்த வைரம் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ளது. கண்டுபிடிக்க்பபட்ட வைரக் கல் போட்ஸ்வானா அதிபர் மொக்வீட்ஸி மாசிசிடம் நேற்று முன்தினம் புதன்கிழமை கையளிக்கபட்டுள்ளது.
கொரோனா தொற்றின் பாதிப்புகள் முடிவடைந்த பின்னர் உலகின் 3வது பெரிய இந்த வைரத்தை ஏலம் விட போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அரசாங்க ட்விட்டர் கணக்கு வைரத்திலிருந்து கிடைக்கும் வருமானம் நாட்டில் தேசிய வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் என்று எழுதியது.
கடந்த 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் 3,106 காரட் அளவு கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் 2017-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இத்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.