சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சோனியா, ராகுல்

காங்கிரசின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி உடல் நலக்குறைவாக உள்ள நிலையில் தற்போது கிட்டத்தட்ட ராகுல்காந்திதான் கட்சியை வழிநடத்தி வருகிறார்.  ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ட்விட்களை பதிவிட்டு மத்திய அரசை கடுமையாக சாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

 சென்ற வருடம் முழுவதும், கொரோனா பரவலை மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது என்று குற்றம்சாட்டி வந்த ராகுல் காந்தி இந்த ஆண்டு, தடுப்பூசி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் வெளியிட்ட தடுப்பூசி தொடர்பான ட்விட்களைப் பார்த்தால், அதில் தனிமனித தாக்குதல்தான் அதிகம் இருப்பதை காணமுடியும்.

தடுப்பூசி, ஆக்சிஜனுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை என்றும், மத்திய தலைமை செயலக கட்டிட திட்டத்துக்காகச் செலவிடும் 13,450 கோடி ரூபாயின் மூலம் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரியது” என்றும் சாடினார்.

பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிற 21-ந் தேதி முதல் வழங்கும் என அதிரடி காட்டினார்.

உண்மையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை ராகுல்காந்தி வரவேற்று இருக்க வேண்டும். மாறாக, தடுப்பூசி போடுவது மாநிலங்களின் சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தடுப்பூசிகளை எங்கள் வசமே கொடுக்கவேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என்று கோரிக்கை வைக்கும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து ராகுலும் குரல் எழுப்புகிறார். அதாவது ஒரே மாதத்தில் இவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை அப்படியே மாற்றி கொண்டு விட்டனர் என்பது தெளிவாகிறது. 

எப்போது பார்த்தாலும் தடுப்பூசி தடுப்பூசி என்று பேசும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என்பதை பாஜக அம்பலப்படுத்தி இருக்கிறது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு சோனியாவும், ராகுலும் தொடர்ந்து தடுப்பூசி பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி பற்றி ஏராளமான சந்தேகங்களை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டனர்.

ஆனால் எனக்கு தெரிந்தவரை சோனியாவும், ராகுலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் ஏன் இந்திய தடுப்பூசிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்” என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேசிய கட்சியின் இரு பெரும் தலைவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது கவலை தரக்கூடிய விஷயம்தான்!

  • 632
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads