சினிமா செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
Ads
 ·   ·  2869 news
  •  ·  1 friends
  • 2 followers

பொய்யுரைக்க வேண்டாம் - அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி தயாசிறி ஜயசேகர

ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''மின்கட்டணம் குறைப்பு ஊடாக நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள்.

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக வாக்குறுதியளித்தார்

5000 ரூபா கட்டணத்தை 3000 ரூபாவாகவும், 9000 ரூபாவை 6000 ரூபாவாகவும் குறைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது கட்டணம் குறைக்கப்படவில்லை.

மின்சார சபை 167 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. எவருக்கும் கடன் இல்லை ஆகவே மின்சார சபை கடன் என்று பொய்யுரைக்க வேண்டாம்.

6.1 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக மின்சார சபை முன்வைத்த முன்மொழிவை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கழு இரத்துச் செய்து மின்கட்டண திருத்த முன்மொழிவை மீளாய்வு செய்யுமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தியிருந்தது.

தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் 56 சதவீதம் நீர்மின்னுற்பத்தியின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஏன் 6 மாத காலத்துக்கு மின்கட்டண திருத்தத்தை பிற்போட வேண்டும் என்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மின்கட்டணத்தை ஓரி நாட்களில் குறைப்பதாக குறிப்பிடவில்லை. 3 வருட காலப்பகுதிக்குள் மின்கட்டணத்தை நிலையான தன்மையில் பேணுதற்கும், மின் கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது என கூறியுள்ளார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தம்புள்ளை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிட்டார்.

தற்போது மின்கட்டணத்தை ஓரிரு நாட்களில் குறைப்பதாக குறிப்பிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஏன் பொய்யுரைக்கின்றீர்கள், காலை முதல் இரவு வரை பொய்யை மாத்திரமே குறிப்பிடுகின்றீர்கள். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம் என்று கூறியுள்ளார்.     

  • 666
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads