சினிமா செய்திகள்
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
Ads
 ·   ·  2869 news
  •  ·  1 friends
  • 2 followers

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம் பெறுகிறதா என்றும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது – சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர்

வேறு மாகாணங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எவ்வாறு கருங்கல் சல்லி மற்றும் கற்தூள் எடுத்து வரப்படுகிறதோ அதே நடைமுறைதான் சுண்ணக் கல்லுக்கும் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ள வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனது செயற்பாடுகளால், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை தடுத்து தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம் பெறுகிறதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாரோ 4 பேர் வழங்கிய தகவலை பொதுமக்கள் வழங்கிய தகவலை வைத்து தனது நிறுவனத்திற்கு எதிராக ஊடகங்களில் தவறான செய்தியை பரப்பியுள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைதிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவன உரிமையாளர் பிரகதீஷ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (04.01.2025) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -   

65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை நாம் செய்து வருகிறோம். 1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1)( 2) பிரிவுகளின் பிரகாரம் எமது வாகனம் சுண்ணக் கற்களை எடுத்துச் சென்றது. 

குறிப்பாக 28 பிரிவின் முதலாவது உப பிரிவு கனியவளங்களை அகழ்வதற்கான அனுமதி எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் அதன் பிரகாரம் கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

கல் உடைக்கும் ஆலைகள் தமது வியாபார நிலையத்தை பதிவு செய்துள்ளார்கள், மத்திய சுற்றடல் அதிகார சபையின் அனுமதிபெற்றுள்ளார்கள் அதுமட்டுமல்லாது கனியவளத் திணைக்களத்தில் அனுமதி பெற்றுள்ளார்கள். 

இதேநேரம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலிருந்து ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.  இவ்வாறு சகல அனுமதிகளும் பெற்றவர்களிடமிருந்து நாம் கல்லை மட்டும் வாங்குகிறோம் நாம் கிடங்கு கிண்டுவதோ அல்லது கல்லை உடைப்பவர்களோ அல்ல. 

குறித்த கற்களுக்கு யாழ்ப்பாணத்தில் கிராக்கி குறைந்துள்ள நிலையில் முறைப்படி அனுமதி பெற்றவர்களிடமிருந்து பணம் கொடுத்து அவர்களின் கல்லை கொள்வனவு செய்து திருகோணமலைக்கு கொண்டு செல்கிறோம். அதில் நாமும் இலாபம் அடைவதோடு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் கல் ஆலைகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் நீண்டகாலமாக பாதுகாத்து வருகிறோம். 

அரசாங்கம் உள்ளூர் முதலீட்டாளர்களையும் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறது. அதனடிப்படையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்காக இரண்டு அடி ஆழம் வரை கல் அகழ முடியும்.

ஆனால் இளங்குமரன் எம்பி தென்மராட்சியில் உள்ள பழைய கிடங்கு ஒன்றினை காட்டி நாம் புன்னாலைக் கட்டுவேன் பகுதியில் எடுத்துச் சென்ற சுண்ணக் கல்லுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

இதேநேரம் எமது நிறுவனத்தை நம்பி நேரடியாக 180 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதேபோல் கல் உடைக்கும் ஆலைகளை நம்பி பரம்பரை பரம்பரையாக 300 இற்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.

யாரோ நான்கு பேர் சொன்ன தகவலை கேட்டு இவ்வாறு செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினனர் இந்த கல்லுடைக்கும் தொழிலை மேற்கொள்ளும் 300 க்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு பதில் கூறுவாரா?.

இதனால் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரது செயற்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் அவர் வழங்கிய ஊடக செய்திகள் தொடர்பில் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கணணி குற்ற பிரிவுக்கு முறைப்பாடு வழங்க உள்ளேன். 

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையில் அதனை தடுத்து தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம் பெறுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது

இதேநேரம் சட்டத்துக்கு உட்பட்டு அன்றிலிருந்து இன்று வரை எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் எமது நிறுவனத்தையும் எமது வியாபாரத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இளங்குமரன் எம்பி செயல்பட்டிருக்கிறார்.

பிரிவு இரண்டின் பிரகாரம் அரை கனியங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி தேவையில்லை இதை அறியாத இளங்குமரன் எம்பி எமது வாகனத்தை மறித்து கற்களுக்கு மேல் போடப்பட்டிருந்த பாதுகாப்பு உறையினை கிழித்து சட்டத்தை தன் கையில் எடுத்துள்ளார். 

முன்பதாக வவுனியா பொலிசார் எமது வாகனத்தை மறித்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு வர்த்தக நடவடிக்கை இடம் பெறுவதாக எமது வாகனத்தை விடுவித்தது. 

அது மட்டுமல்லாது மற்றொரு நீதிமன்றமான கெப்பெற்றிக்கொல்லாவை நீதிமன்றமும் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தீர்ப்பு வழங்கியது .

வவுனியா நீதிமன்றம் மற்றும் கெப்பற்றிக்கொல்லாவ நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதாக கௌரவ நீதிமன்றங்கள் தனது தீர்ப்பில் சுட்டி சுட்டிக்காட்டியுள்ளன. 

அந்தவகையில் மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது.  எனவே தொழில் வழங்குனர்களையும் முதலீட்டாளர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் செயல்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினரை கேட்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

  • 415
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads