சினிமா செய்திகள்
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
Ads
 ·   ·  2869 news
  •  ·  1 friends
  • 2 followers

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ். மாவட்ட டெங்கு நோய் தாக்கம் நவம்பர் மாதம்முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. நவம்பர் மாதத்திலே 134 நோயாளர்களும் டிசம்பர் மாதத்திலே 241 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தார்கள்.

டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் பின்னர் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது. டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 18 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். அதேபோன்று 26, 27 ஆம் திகதி அதிகளவு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள்.

எனவே, திடீரென அதிகரித்த அதிகரிப்பாக இது காணப்பட்டது. அதற்கு பின்னர் 28ஆம் திகதி 8 நோயாளர்களும் 29 ஆம் திகதி 12 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தார்கள்.

ஆகையால், இப்படியான சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டால் ஜனவரி மாதத்தில் அதிகளவு டெங்கு பரம்பல் ஏற்படலாம். டெங்கு இறப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

மேலும், எங்கள் பூச்சியியல் ஆய்வுகளை அவதானிக்கின்ற பொழுது டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பின் செறிவு யாழ். மாவட்டத்தில் அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 2024 ஆம் ஆண்டில் 5890 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு இறப்பு ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு நோய் கட்டுப்பாடுகளை நாம் தீவிரபடுத்த வேண்டிய சூழல் உள்ளது. அந்தவகையில் பிரதம செயலாளர் தலைமையில் விசேட டெங்கு தடுப்பு கூட்டம் இடம்பெற்றது.

அதற்கு பின்னர் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஒலிபெருக்கி பிரசாரத்தினை யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொண்டோம்.

உள்ளூராட்சிமன்ற உதவியோடு கொள்கலன்களை அகற்றும் செயற்திட்டத்தினை முன்னெடுத்தோம். இதற்கு மேலதிகமாக விசேட நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் புகையூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

அத்துடன், பூச்சியியல் ஆய்வு நடவடிக்கைகளின் உதவிகளுக்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பணியாளர்களும் இணைந்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

000

  • 606
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads