சினிமா செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
Ads
 ·   ·  2869 news
  •  ·  1 friends
  • 2 followers

உலக மண் தினம் இன்று

உலக மண் தினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உலக மண் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு உணவு மற்றும் விவசாய அமைப்பினரால் முன் மொழியப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, 2014 முதல் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறைந்து வரும் மண் வளம், மண் மாசுபாடுகளினால் எதிர்கால தலைமுறையினர் முகம் கொடுக்கப் போகும் சவால்களைக் கருத்தில்கொண்டே இத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மனிதன் உயிர் வாழ காரணம் உணவு. அந்த உணவே மண்ணிலிருந்துதான் ஆரம்பமாகிறது. இப் பூமியில் பிறந்த மனிதன் உட்பட ஒவ்வொரு உயிரினமுமே மண்ணை நம்பியே உள்ளன.

இந்த மண் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக ஆகக் குறைந்தது 500 வருடங்கள் ஆகுமாம்.

ஒரு கைப்பிடி மண்ணில் 45 சதவீதம் கனிமப் பொருட்கள், 25 சதவீதம் நீர், 25 சதவீதம் காற்று, 5 சதவீதம் நுண்ணுயிர்களும் உள்ளடங்கியுள்ளன.

தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான நைதரசன், பொஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மங்கனீசு, பொட்டாசியம் ஆகிய கனிமச் சத்துக்கள் மண்ணுக்குள் நிறைந்துள்ளன.

ஆய்வொன்றின்படி, ஒரு தேக்கரண்டி மண்ணில் 100 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையில் பக்டீரியாக்கள் உள்ளன.

மனிதனின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் மண் எத்தனைபேரால் காக்கப்படுகிறது?

இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் மண் அரிப்பு ஒரு புறம், மனிதர்களால் தோண்டப்படுதல் மறுபுறம். மற்றும் தேவையற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மண்ணின் தன்மையை இழக்கச் செய்கின்றன.

இதுபோன்ற செயற்பாடுகளினால் மண்ணிலுள்ள இலட்சக்கணக்கான உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இதனால் மண்ணும் அதன் உறுதித் தன்மையை இழக்கிறது.

மண் ஒரு வரையறுக்கப்பட்ட வளம் மற்றும் இயற்கை சூழலின் அடிப்படையான ஒரு அங்கமும் கூட. இவ்வாறிருக்கும்போது மண் வளத்தைக் காப்பது ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் மண்ணை கண்ணைப் போல் பார்க்கிறார்கள். மேலும் பூமித்தாய் தான் நம் வாழ்வாதாரத்துக்கு காரணம் என்று அதனைப் போற்றுகின்றனர். ஆனால், நாம் விவசாயிகளையும் மறந்து விடுகிறோம். மண்ணையும் காக்கத் தவறிவிடுகின்றோம்.

தற்போதைய காலகட்டத்தில் இது பெரிய விடயமாக இல்லாவிட்டாலும் நம் எதிர்கால சந்ததியினருக்கு மண் வாசம் எவ்வாறு இருக்கும் என்பது கூட தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

இறுதியாக மனிதன் தன் வாழக்கைப் பந்தயத்தை முடித்துக்கொண்டு மண்ணுக்குள்தான் சங்கமமாகின்றான். எனவே மனிதனின் இறுதிப் பயணம் வரையில் மண் நம்முடன் தான் துணை நிற்கிறது.

000

  • 552
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads