சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
Ads
 ·   ·  666 news
  •  ·  15 friends
  • S

    23 followers

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பிரதான வீதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பிரதான வீதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காணப்படும் பாலமானது இறுதியாக ஏற்பட்ட பாரிய மழைவீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் குறிதத் பாலத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த பாலமானது வாகனங்கள் சென்றுவரும் சூழலில் உடைந்து விழும் அபாய நிலைஏற்பட்டிருந்தது. குறித்த நிலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் கள ஆய்வினை மேற்கொண்டிருந்ததுடன், தற்காலிகமாக பாலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.அண்ணளவாக 30 அடி நீளம் கொண்ட குறித்த பாலமானது வெள்ளத்தினால் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலை காரணமாக ஏற்கனவே 2500 மண்மூடைகளினால் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள உடைவினை பாதுகாப்பதற்காக 750 பைகளில் மண் நிரப்பப்பட்டு குறிபாதுகாப்பதற்கான தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது .குறித்த பாலத்தினை பாதுகாப்பதற்காக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் இராணுவத்தினரின் உதவியை கேட்டுள்ள நிலையில், குறித்த பணியில் வினாவோடை இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் பணியில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இதேவேளை குறித்த பாலத்தினை பயன்படுத்தி வினாவோடை கிராமத்தில் உள்ள சுமார் 200 குடும்பங்கள் நம்பி வாழ்வதாகவும், பாலம் உடைந்து போக்குவரத்து தடைபடும் சந்தர்ப்பத்தில் குறித்த குடும்பங்கள் போக்குவரத்தின்றி தனிமைப்பட வேண்டிய அபாய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டு அதனை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும், குறித்த பாலம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என நம்புவதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.பருவ மழை ஆரம்பிக்கும் முன்னராக குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்து தருமாறு பிரதேச மக்களால் கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

  • 662
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads