சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பிரதான வீதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பிரதான வீதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காணப்படும் பாலமானது இறுதியாக ஏற்பட்ட பாரிய மழைவீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் குறிதத் பாலத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த பாலமானது வாகனங்கள் சென்றுவரும் சூழலில் உடைந்து விழும் அபாய நிலைஏற்பட்டிருந்தது. குறித்த நிலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் கள ஆய்வினை மேற்கொண்டிருந்ததுடன், தற்காலிகமாக பாலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.அண்ணளவாக 30 அடி நீளம் கொண்ட குறித்த பாலமானது வெள்ளத்தினால் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலை காரணமாக ஏற்கனவே 2500 மண்மூடைகளினால் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள உடைவினை பாதுகாப்பதற்காக 750 பைகளில் மண் நிரப்பப்பட்டு குறிபாதுகாப்பதற்கான தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது .குறித்த பாலத்தினை பாதுகாப்பதற்காக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் இராணுவத்தினரின் உதவியை கேட்டுள்ள நிலையில், குறித்த பணியில் வினாவோடை இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் பணியில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இதேவேளை குறித்த பாலத்தினை பயன்படுத்தி வினாவோடை கிராமத்தில் உள்ள சுமார் 200 குடும்பங்கள் நம்பி வாழ்வதாகவும், பாலம் உடைந்து போக்குவரத்து தடைபடும் சந்தர்ப்பத்தில் குறித்த குடும்பங்கள் போக்குவரத்தின்றி தனிமைப்பட வேண்டிய அபாய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டு அதனை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும், குறித்த பாலம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என நம்புவதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.பருவ மழை ஆரம்பிக்கும் முன்னராக குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்து தருமாறு பிரதேச மக்களால் கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

  • 796
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads