Ads
கேரளாவில் இன்று 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 24 ஆயிரத்து 166 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 539 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 98 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads