சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சிறிலங்கா பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

புத்த பெருமானின் ஐனனம், ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிலைகளை நினைவுகூரும் புனித வெசாக் பண்டிகையானது உலகவாழ் பௌத்த மக்களினால் பக்தியோடு கொண்டாடப்படும் உன்னத பண்டிகையாகும்.



பௌத்த பாரம்பரியத்தால் வளப்படுத்தப்பட்ட பெருமைமிக்க கலாசாரத்திற்கு உரிமை கோரும் இலங்கையர் அனைவரும், உலகம் முழுவதும் பரந்து வாழும் பௌத்தர்களுடன் இணைந்து இப்புனித பண்டிகையை பக்தியோடு கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் வெசாக் பண்டிகையை உலகம் முழுவதும் பரவிவரும் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் கொண்டாட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.



ஆகவே புத்தரின் போதனைகளுக்கு அமைவாக, நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்து, புத்தபெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான வழிபாட்டு முறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு பொருத்தமாக காலாகமாகவம் தற்காலம் விளங்கி வருகின்றது.



அத்துடன் இதுபோன்ற சவாலான காலத்தில் புத்த பெருமானின் போதனைகளில் காணப்படும் பெருமதிப்பு மிக்க உள்ளார்ந்த தத்துவங்களை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் தர்மத்தின் வழியிலான வாழ்க்கையை வாழ முடியும். உலக பொக்கிஷமான பௌத்த சமயம் என்பது பௌத்தர்களுக்கானது மட்டுமல்ல, உலகவாழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகும். பௌத்த சித்தாந்தத்தின் வாயிலாக நாம் பெற்றக்கொண்ட ஒழுக்கமானது, வரலாறு முழுவதும் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பாரிய உதவியாக அமைந்ததோடு இலங்கை எனும் தேசமாக உலகத்தின் முன்பாக பெருமையோடு நிற்கவும் உதவியது.



அரச வெசாக் திருநாள் வைபவத்தை இவ்வருடம் யாழ்ப்பாணம் நயினா தீவில் அமைந்துள்ள நாகதீப ரஜமஹா விஹாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும், தற்போது நிலவிவரும் கொவிட் தொற்று அதற்கு இடையூறாக விளங்கிவருகின்றது. ஆயினும் திருநாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடுவதற்கு இந்நோய் ஒர் தடையாக அமையுமென எண்ணவில்லை. கொள்கை ரீதியாக வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து வீட்டிலிருந்த வண்ணம் இந்த உன்னத திருநாளை கொண்டாடி அகமகிழுமாறு இலங்கைவாழ் பௌத்தர்களிடம் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.



புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவலக அமைச்சர் என்ற ரீதியிலும், பிரதமர் என்ற வகையிலும், கொவிட் தொற்று உலகிலிருந்து முற்றிலுமாக நீங்கி, அனைத்து மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்திக்கிறேன்.



உலக வாழ் மக்கள் அனைவருக்கும் இரக்கமும், கருணையும் மிகுந்த இனிய வெசாக் தின நல்வாழ்த்துக்கள் என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

  • 524
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads