சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
Ads
 ·   ·  7586 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர்

ஆன்-லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளி-கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்-லைன்’ மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை கே.கே.நகரில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ‘ஆன்-லைன்’ வழி கல்வியை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இவர், ‘ஆன்-லைன்’ மூலம் பாடம் நடத்தும்போது, ‘அரைகுறை அடை அணிந்து கொண்டு மாணவிகளின் உடை, அழகை வர்ணிப்பதாகவும், ‘வாட்ஸ்-அப்’-பில் ஆபாசமான முறையில் தகவல் அனுப்பியும், செல்போனில் அநாகரீகமான முறையில் பேசியும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது.

மாணவர்-ஆசிரியர் என்ற புனிதமான உறவை தாண்டி, வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ராஜகோபாலனை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியும் நேரில் விசாரணை நடத்துவதற்காக நேற்று மதியம் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு வருகை தந்தார்.

ஆனால் அவரது விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் போதுமான அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனை அவரது வீட்டில் இருந்து போலீசார் விசாரணைக்காக வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவரது ‘லேப்-டாப்’, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீது முறைப்படி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

ராஜகோபாலனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட பல குருஞ்செய்திகளையும், போட்டோக்களையும் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்டுள்ளனர். அதில் பல மாணவிகளுக்கு செல்பி அனுப்புவது, சினிமா அல்லது வெளியில் செல்லலாம் என குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், ராஜகோபாலிடம் இது குறித்து விசாரித்த போது ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

தன்னிடம் படித்த மாணவிகளிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், இரட்டை அர்த்ததில் பேசுவதையும் தான் ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

  • 493
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads