சினிமா செய்திகள்
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
Ads
 ·   ·  2994 news
  •  ·  1 friends
  • 2 followers

ஜனாதிபதி தேர்தல் - எவ்வளவு செலவானாலும் வழங்கத் தயார் - திறைசேரி

ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தேர்தலுக்கான செலவுகள் அதிகரித்தாலும் அத் தொகையை வழங்க திறைசேரி தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய தேர்தலுக்காக நிதி வழங்க திறைசேரி தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், பணப் புழக்கங்களுக்கிடையில் முரண்படாத வகையில் பணத்தை விடுவிப்பதற்கு பொருளாதாரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, தேர்தல் ஆணையாளர் அலுவலகம் சுமார் 08 பில்லியன் ரூபா அண்ணளவான மதிப்பீட்டை திறைசேரிக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள், வாக்குப்பெட்டி தயாரிப்பு போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்காகவும் திறைசேரி பணத்தை விடுவிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தேர்தலுக்கான வேறு செலவுகள் மதிப்பிடப்பட்ட தொகைக்கு மேலதிகமாகஅதிகரித்தாலும், நிச்சயமற்ற செயற்பாடுகளுக்கு ஏற்ப தற்போது பணம் கையிருப்பில் உள்ளது.

இதனால் மேலதிக செலவுகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 2019 தேர்தலை விட அதிகரித்தால் வாக்குச்சீட்டின் நீளத்தை அதிகரிக்க முடியாததால் சிஆர் (CR) பயிற்சிப் புத்தகத்தின் பக்கத்தைப் போன்று அச்சிட வேண்டியிருக்கும் என அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 35 வேட்பாளர்கள் முன்னிலையாகி இருந்ததால் 26 அங்குல நீளமான வாக்குச் சீட்டு அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குச் சீட்டு அச்சிடக்கூடிய அதிகபட்ச நீளம் 26 அங்குலம் என்றும் அதற்கு மேல் அச்சிட முடியாது என்றும் அவர் கூறினார். அச்சிடுவதற்காக அதே அளவு காகிதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு வாக்குச்சீட்டு பெரிதாக்கப்படுவதால் வாக்குப்பெட்டியில் போடக்கூடிய தாள்களின் எண்ணிக்கையும் குறையும் என்று அரச அச்சகர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள் போன்றவற்றை அச்சிடும் பணிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • 362
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads