சினிமா செய்திகள்
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
Ads
 ·   ·  2821 news
  •  ·  1 friends
  • 2 followers

இலங்கை - இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி

இலங்கை - இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்தியா 7 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை - இந்திய அணிகள் மோதிய போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குசல் மெண்டிஸின் விக்கெட்டை 10 ஓட்டங்களுடன் இழந்த போதிலும் பின்னர் குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க ஆகியோரது ஆட்டத்தோடு போட்டியில் முன்னேறியது. 

இந்த நிலையில் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குசல் பெரேரா அரைச்சதம் விளாசி இலங்கை அணியினை பலப்படுத்தினார்.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் மத்திய வரிசையில் தடுமாறி 20 ஓவர்களுக்கு இலங்கை அணியானது 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் பெற்றது. 

இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா அதிகபட்சமாக தன்னுடைய 14 ஆவது அரைச்சதத்தோடு 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகளோடு 53 ஓட்டங்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுக்களையும் அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

மழை காரணமாக போட்டியின் வெற்றி இலக்கு 8 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் என டக்வெத் லூயிஸ் முறையில் தீர்மானிக்கப்பட்டதோடு, குறித்த வெற்றி இலக்கை இந்திய அணி 6.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த வீரர்களில் யஷாஷ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். 

போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பிஸ்னோய் தெரிவாகினார். இலங்கை இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (30) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

 

  • 407
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads