சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

இலங்கை - இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி

இலங்கை - இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்தியா 7 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை - இந்திய அணிகள் மோதிய போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குசல் மெண்டிஸின் விக்கெட்டை 10 ஓட்டங்களுடன் இழந்த போதிலும் பின்னர் குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க ஆகியோரது ஆட்டத்தோடு போட்டியில் முன்னேறியது. 

இந்த நிலையில் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குசல் பெரேரா அரைச்சதம் விளாசி இலங்கை அணியினை பலப்படுத்தினார்.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் மத்திய வரிசையில் தடுமாறி 20 ஓவர்களுக்கு இலங்கை அணியானது 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் பெற்றது. 

இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா அதிகபட்சமாக தன்னுடைய 14 ஆவது அரைச்சதத்தோடு 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகளோடு 53 ஓட்டங்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுக்களையும் அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

மழை காரணமாக போட்டியின் வெற்றி இலக்கு 8 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் என டக்வெத் லூயிஸ் முறையில் தீர்மானிக்கப்பட்டதோடு, குறித்த வெற்றி இலக்கை இந்திய அணி 6.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த வீரர்களில் யஷாஷ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். 

போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பிஸ்னோய் தெரிவாகினார். இலங்கை இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (30) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

 

  • 313
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads