சினிமா செய்திகள்
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
Ads
 ·   ·  2994 news
  •  ·  1 friends
  • 2 followers

ஆசிய கிண்ண கிரிக்கெட் - இந்தியாவை வீழ்த்தி புது சரித்திரம் படைத்த இலங்கை மகளிர் அணி

சமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

நேற்று (28) நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் பிரபல இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி, ஆசியக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது. 

இதற்கு முன்னர் ஐந்து முறை (2004, 2005, 2006, 2008 மற்றும் 2022) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் இறுதிப்போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மகளிர் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது இதுவே முதல் தடவையாகும்.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீராங்கனைகளாக ஷபாலி வர்மா  ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷபாலி வர்மா 16 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா செத்ரி 9 ஓட்டங்களுடனும், அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்தினர். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 10 பௌண்டறிகளுடன் 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் பூஜா அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது. 

இலங்கை மகளிர் அணி தரப்பில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், உதேஷிகா ப்ரபோதானி, சச்சினி நிசன்சலா, சமரி அத்தபத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரட்ன - அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோர் ஆரம்பம் கொடுத்தனர். இதில் விஷ்மி குணரட்ன ஒரு ஓட்டத்துடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சமரி அத்தபத்து - ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைச் சதங்களை பதிவுசெய்தனர். 

இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெற்ற நிலையில் 9 பௌண்டறிகள், 2 சிக்ஸர்கள் என 61 ஓட்டங்களை எடுத்திருந்த சமரி அத்தபத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கவிஷா டில்ஹாரியும் அபாரமாக விளையாட இலங்கை அணியின் வெற்றியும் உறுதியானது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரம 6 பௌண்டறிகள், 2 சிக்ஸர்கள் என 69 ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி ஒரு பௌண்டறி, 2 சிக்ஸர்கள் என 30 ஓட்டங்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தெடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. 

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியாவை தவிர்த்து பங்களாதேஷ் மட்டுமே ஒருமுறை வெற்றி பெற்று இருந்தது. தற்போது இலங்கை அணி மூன்றாவதாக மகளிர் ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 9 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர்களில் இந்தியா ஏழு முறையும், பங்களாதேஷ் மற்றும் இலங்கை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகி விருதை ஹர்ஷிதா சமரவிக்ரம தட்டிச் செல்ல, தொடர் நாயகி விருதை சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

  • 443
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads