சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

ஆசிய கிண்ண கிரிக்கெட் - இந்தியாவை வீழ்த்தி புது சரித்திரம் படைத்த இலங்கை மகளிர் அணி

சமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

நேற்று (28) நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் பிரபல இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி, ஆசியக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது. 

இதற்கு முன்னர் ஐந்து முறை (2004, 2005, 2006, 2008 மற்றும் 2022) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் இறுதிப்போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மகளிர் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது இதுவே முதல் தடவையாகும்.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீராங்கனைகளாக ஷபாலி வர்மா  ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷபாலி வர்மா 16 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா செத்ரி 9 ஓட்டங்களுடனும், அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்தினர். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 10 பௌண்டறிகளுடன் 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் பூஜா அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது. 

இலங்கை மகளிர் அணி தரப்பில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், உதேஷிகா ப்ரபோதானி, சச்சினி நிசன்சலா, சமரி அத்தபத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரட்ன - அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோர் ஆரம்பம் கொடுத்தனர். இதில் விஷ்மி குணரட்ன ஒரு ஓட்டத்துடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சமரி அத்தபத்து - ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைச் சதங்களை பதிவுசெய்தனர். 

இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெற்ற நிலையில் 9 பௌண்டறிகள், 2 சிக்ஸர்கள் என 61 ஓட்டங்களை எடுத்திருந்த சமரி அத்தபத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கவிஷா டில்ஹாரியும் அபாரமாக விளையாட இலங்கை அணியின் வெற்றியும் உறுதியானது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரம 6 பௌண்டறிகள், 2 சிக்ஸர்கள் என 69 ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி ஒரு பௌண்டறி, 2 சிக்ஸர்கள் என 30 ஓட்டங்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தெடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. 

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியாவை தவிர்த்து பங்களாதேஷ் மட்டுமே ஒருமுறை வெற்றி பெற்று இருந்தது. தற்போது இலங்கை அணி மூன்றாவதாக மகளிர் ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 9 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர்களில் இந்தியா ஏழு முறையும், பங்களாதேஷ் மற்றும் இலங்கை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகி விருதை ஹர்ஷிதா சமரவிக்ரம தட்டிச் செல்ல, தொடர் நாயகி விருதை சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

  • 335
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads