சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

அரசியலமைப்பு பேரவை தொடர்பிலான விவகாரம் - மீண்டும் உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை கோரும் ஜனாதிபதி

நாட்டின் ஜனாதிபதி, முன்மொழிந்த ஒருவர் தொடர்பான வாக்கெடுப்பின் போது அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் கலந்து கொள்ளாமல் இருப்பது என்பது பிரேரணைக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பதாக அமையுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரியை நீக்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கோருவது குறித்தும் ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவியில் செயற்படுவதைத் தடுக்கும் வகையில் மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள், இடைக்கால உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் வாக்கெடுப்பின்போது, அதன் ஒரு உறுப்பினர் வாக்களிக்காதது அல்லது பிரசன்னமாகாதது என்பது, குறித்த யோசனைக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவே கருதப்படும் என்பது குறித்து தெளிவான சட்ட விதிகள் எதுவும் இல்லை என்பதால், நீதிமன்றத்தின் கருத்தைப் பெற ஜனாதிபதி முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை அரசியலமைப்பு பேரவையால்; அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் நியமனங்களை கேள்வி கேட்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற கூற்று தமது பார்வையில், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 402
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads