சினிமா செய்திகள்
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
Ads
 ·   ·  2994 news
  •  ·  1 friends
  • 2 followers

தேர்தல் சட்டங்களுக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது - அழுத்தங்களுக்கும் அடிபணிய போவதில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவிப்பு

அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் என்பனவற்றுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். இதனை தவிர்த்து பிற தரப்பினரது அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது. தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வெகுவிரைவில் வெளியிடுவோம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும், எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி வேட்பு மனுக்களை பொறுப்பேற்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை (26) முதல் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிதி அதிகாரியிடம் கட்டுப்பணத்தை செலுத்த முடியும். குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50000 ரூபாவும்,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஏன் விரைவாக வெளியிடவில்லை. என்று பலர் கடந்த காலங்களில் கேள்வியெழுப்பினார்கள். தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

அனைவருக்கும் சாதகமான வகையில் சனிக்கிழமையன்று வாக்கெடுப்பை நடத்த தீர்மானித்துள்ளோம். சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். முன்வைக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுக்களுக்கும் வர்த்தமானி ஊடாக பதிலளித்துள்ளோம்.

அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் என்பனவற்றுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். இதனை தவிர்த்து பிற தரப்பினரது அழுத்தங்களுக்கு தலைகுனிய போவதில்லை. தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை (26) செயற்படுத்தப்படும்.

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது. தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வெகுவிரைவில் வெளியிடுவோம்.

ஜனாதிபதித் தேர்தல் பணிகளை அரச அச்சகத் திணைக்களமும், தபால் திணைக்களமும் நேற்று வெள்ளிக்கிழமை (26) முதல் ஆரம்பித்துள்ளது. தேர்தல் பணிகளுக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஆணைக்குழுவுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார். தேர்தல் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 728
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads