சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  7897 news
  •  ·  5 friends
  • I

    9 followers

காதல் மனைவிக்காக 320 கி.மீ பயணம் செய்கிறார் லின் ஷூ

சீனாவில் புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் தன் காதல் மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரில் வசிப்பவர் லின் ஷூ (வயது 31), இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக தான் காதலித்துவந்த பெண்ணை இந்தாண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் லின் தனது மனைவியின் மீது கொண்ட காதல் சற்றும் குறையவில்லை. லின்னின் மனைவியின் சொந்த ஊர் வெயிபாங். திருமணத்திற்கு முன்பு வாடகை வீட்டில் லின் வசித்து வந்தார். அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் அவர் வேலை செய்யும் இடத்தை அடைந்துவிடுவார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னர், காதல் மனைவி சொந்த ஊரிலேயே வேலை செய்து வந்ததால், அவருடன் அதிக நேரம் செலவிட விரும்பியும், அங்கேயே பிளாட் ஒன்றை வாங்க முடிவு செய்தார். சொந்த ஊரிலேயே வசிப்பிடம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த அவர் அங்கேயே பிளாட் ஒன்றை வாங்கி குடியேறினார். தற்போது வாங்கிய பிளாட்டிலிருந்து அவர் அலுவலகத்திற்குமான இடைவெளி 160 கி.மீ. தொலைவாகும். எனவே, தினமும் அவர் வேலைக்குச் சென்று திரும்பவேண்டுமென்றால் 320 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் காதல் மனைவிக்காக சற்றும் சலிப்படையாமல் பயணித்து வந்துள்ளார். தினமும் அவர் பயணத்தின் விடியோ பதிவுகளை அந்த நாட்டின் சமூக ஊடக தளமான ட்டுயினில் பதிவிட்டுள்ளார்.

இதன்படி அவர் தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெயிபாங்கில் உள்ள தனது வீட்டை விட்டு 5.20 மணியளவில் புறப்படுவாராம். அதன் பின்னர் மின்சார வாகனத்தில் 30 நிமிடம் பயணித்து காலை 6.15க்கு ரயில் நிலையம் சென்றடைவார். பிறகு ஷான்டாங்கின் கிழக்குப் பகுதியில் உள்ள குயிங்டாவோ நகருக்கு காலை 7.46க்கு மணிக்கு வந்தடையும் லின், ரயிலிலிருந்து இறங்கி 15 நிமிடங்கள் நடைப்பயணமாக வேலை செய்யும் இடத்தை அடைவாராம். காலை 9 மணிக்கு வேலையைத் தொடங்கும் லின், பணி முடிந்த பிறகு மீண்டும் நான்கு மணி நேரம் பயணித்து தனது வீட்டை அடைவார்.

சமூக ஊடகத்தில் லின் பதிவிட்ட பயணத்தின் நேரம் குறித்து பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் சமூக ஊடகத்தின் வாயிலாகக் கருத்துக்கேட்டபோது எல்லாம் என் காதல் மனைவிக்காக, இந்த பயணம் எனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவரது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, லின்னின் மேலாளர் கூடுதல் நேரம் வேலை செய்ய அவருக்குக் கட்டளையிடுவதில்லையாம். அவர் தனது மனைவி குயிங்டாவோவில் வேலை தேடுவதால், இந்த பயணம் தற்காலிகமானது. குயிங்டோவில் வேலை கிடைத்ததும் அந்த நகரிலேயே வசிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். லின்னின் பயணம் சமூக தளத்தில் வரலாகப் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • 675
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads