சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  2864 news
  •  ·  1 friends
  • 2 followers

இட ஒதுக்கீட்டு முறையில் பாரபட்சம் - வங்களாதேஷில் வன்முறை - 39 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு, அந்நாட்டு அரச வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

எனினும் இந்த இட ஒதுக்கீட்டு முறை பாரபட்சமாக உள்ளது எனத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி மாணவர்களைக் கலைத்தனர்.

இந்த வன்முறையில் 39 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் போராட்டக்காரர்களால் பொதுஇடங்கள், சிறைச்சாலை, கட்டடங்கள் என பல பகுதிகளிலும் தீ வைக்கப்பட்டது.

பங்களாதேஷின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனைப் பயன்படுத்தி சிறையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

இதேவேளை டாக்காவில் அரச தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர் அரச தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு தீ வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதவிர நேற்றுமுன்தினம் (18) பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை நடந்த போராட்டங்களில் 50ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

போராட்டம் காரணமாக பங்களாதேஷ் முழுவதும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் காலவரையின்றி மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பல நகரங்களில் இணையத் தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள்மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரனைட்களையும் காவல்துறையினர் உபயோகித்து வருகின்றனர். தலைநகரில் உள்ள தொடருந்து நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர எல்லைப் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 823
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads